‘நடிகைகளோட கிசுகிசுக்குறத விட்டுட்டு, வேற யாரோ ஒரு புதுப்பொண்ணோட சேர்த்துவச்சி கிசுகிசு எழுதுற புண்ணியவான்களே, தயவு செஞ்சி எங்க இருந்தாலும் அந்த பொண்ண கண்டுபிடிச்சி எனக்கு அறிமுகப்படுத்தி வைங்க பாஸ்’ என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்கிறார் மீண்டும் தன் குழந்தைகளுக்கு அன்புள்ள அப்பாவாக மாறியிருக்கும் தாடிதேவா.

மும்பையில் இன்றைக்கு மோஸ்ட் வாண்ட்ட் டைரக்டர் என்றால் அது பிரபுதேவாதான். சல்மானில் துவங்கி அனைத்து பெரிய நட்சத்திரங்களும் தேவாவுக்காக தேவுடு காக்கக்கூட தயாராக இருக்கிறார்கள்.

இதற்காக, தனது பொட்டி படுக்கைகளுடன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்ட பிரபுதேவா, கன்னிகளின் பால் தனது கவனம் மீண்டும் போய்விடக்கூடாது என்பதற்காக, ஓய்வு நேரங்களில் தனது பிள்ளைகளுக்கு ஃப்ளைட் டிக்கட் போட்டு அடிக்கடி மும்பைக்கு வரவழைத்துவிடுகிறாராம்.

‘நான் மும்பையில் செட்டில் ஆனது குறித்து இதுவரை எக்கச்சக்கமான வதந்திகளை படித்துவிட்டேன்.சினிமாவுக்கு சம்பந்தமில்லாத யாரோ ஒரு இளம்பெண்ணுடன் நான் வாழ்ந்துவருகிறேனாம். அதுபற்றியெல்லாம் டென்சன் ஆகும் நிலையில் நான் இல்லை. எனது கவனம் முழுவதும் அடுத்து சல்மான் கானை வைத்து இயக்கப்போகும் படத்தில் மட்டுமே உள்ளது. எனது மும்பை வீட்டில் ரகஸியமாக எந்தப்பெண்ணுடனும் நான் வாழவில்லை.

ஓய்வு நேரங்களில் எனது பிள்ளைகளை வரவழைத்து, அவர்களுடன் ஆனந்தமாக விளையாடுகிறேன். கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் இருவருமே சூரப்புலிகளாக இருக்கிறார்கள். நானும் இப்போது அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்’ என்கிறார்.

கொஞ்சநாள் முந்திவரைக்கும் அடப்பாவி’ன்னு சொல்ற மாதிரி இருந்தவரு இப்ப அப்பா’வின்னு சொல்ற மாதிரி மாறியிருக்குறாரு. நல்ல விசயம்தான?’

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.