இன்றைய தேதியில், கிசுகிசு எழுதுகிற பயலுகள் அளவுக்கு கெட்டவர்கள் யாரும் இல்லை என்ற நடிகைகளின் நினைப்பு நாளுக்கு நாள் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது.

அதையும் சும்மா எழுதிவிட்டுப்போகாமல், அப்படி எழுத அவர்கள் பிடிக்கும் லாஜிக்தான் பலசமயங்களில் சம்பந்தப்பட்டவர்களின் மண்டையை மேலும் சூடாக்குகிறது.

பாவம், நம்ம பூர்ணாவை எடுத்துக்கொள்ளுங்கள். தமிழில் சொல்லிக்கொள்ளும்படி தன்னை எந்த இயக்குனரும் அள்ளிக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில், ஒன்றிரண்டு மலையாளப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்த பூர்ணாவுக்கு, திடீர் ஜாக்பாட்டாக’ சட்டக்காரி’ ரீ-மேக்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

நம்ம லட்சுமி, மோகன் நடிப்பில் 1974-ல் வெளிவந்து, கெட்ட வசூலை அள்ளிய ‘சட்டக்காரி’ ரிலீஸானவுடன், காதலர்களாக இருந்த லட்சுமி, மோகன் ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.

28 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த லாஜிக்கை கையில் எடுத்துக்கொண்டு, அதே வழியில் ரீ-மேக் ‘சட்டக்காரி’ ஜோடிகளான பூர்ணாவும், இவருக்கு ஜோடியாக நடித்த ஹேமந்தும் தீவிரமான காதலில் விழுந்து கிடப்பதாகவும், விரைவிலேயே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், இன்னும் ஒரு படி மேலே போய், ஹேமந்துக்காக, பூர்ணா தனது இஸ்லாம் மத்த்திலிருந்து மாறப்போவதாகவும் கேப் விடாமல் கெடா வெட்டியிருக்கிறார்கள், சில துஷ்ட சக்திகள்.

‘’ஒரு சக நடிகர்ங்கிற முறையில ஹேமந்த் கிட்ட நெருங்கிப் பழகினது தவிர, நான் எந்தத் தப்புத்தண்டாவுமே பண்ணல. பிறகு ஏன் இப்படி எக்குத்தப்பா எழுதுறாங்கன்னே புரியல?’ என்று புலம்பித்தவிக்கிறார் பூர்ணா.

கிசுகிசு எழுதுறவனுக யாருன்னு கண்டுபுடிச்சி, அவிங்க கிட்டயும் கொஞ்சம் நெருங்கிப் பழக ஆரம்பிச்சீங்கன்னா, எல்லா ப்ராப்ளமும் பரிபூரணமா சால்வ் ஆயிடும்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.