richa-out-from-birianyi-nov12

தமிழில் கைவசமிருந்த ஒரே படமான ‘பிரியாணி’ யிலிருந்தும் கதையின் வாசணை பிடிக்காமல் ரிச்சா கடுங்கோபத்துடன் வெளியேறிவிட்டதாக வந்த தகவல்களில் ஏதோ லாஜிக் இடிப்பது போலவே இருந்தது.

ஆனால் கொஞ்சம் ’இறங்கி’ விசாரித்தபோது ‘சென்னை-28 பாய்ஸின் சேட்டைகள், அட்டகாசங்கள் , அட்டூழியங்கள் மற்றும்  இன்னபிற சமாச்சாரங்களை சகிக்கமுடியாமல்தான் ரிச்சா ஓட்டம் பிடித்ததாக தெரியவருகிறது.

‘’கதையில கொஞ்சம் கரெக்‌ஷன் பண்ணியிருக்கோம் வந்து கேட்டுட்டுப்போங்க’’ நம்ம பிரேம்ஜிக்கு இன்னைக்கும் பொறந்த நாள் பார்ட்டிக்கு பளபளன்னு வந்துடுங்க’ , இன்னிக்கு ஈவ்னிங் நம்ம ‘சென்னை-28 பையன் ஒருத்தனுக்கு காதுகுத்து கண்டிப்பா பார்ட்டிக்கு வந்துடுங்க’  -இப்படியே மாதத்தில் முக்கால்வாசி நாட்களை மூழ்கடித்துக்கொண்டிருந்தார்களாம் அந்த பார்ட்டி நாட்டி பாய்ஸ்.

ஒருத்தர் ரெண்டுபேருன்னா சமாளிக்கலாம். இவிங்க கூட்டம் ரொம்பவும் பெருசா இருக்கே. கட்டுபடியாகாதுடா சாமி’ என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு கழண்டுகொண்டாராம் ரிச்சா.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.