aathi1

சிந்து சமவெளிஎன்ற படத்தின் மூலம் தமிழ்க் கலாச்சாரக் காவலர்களின் மத்தியில் பெரும் பவர் ஸ்டாராக மாறிய இயக்குனர் சாமி, அடுத்து அவரது முன்னாள் ஹீரோமிருகம்ஆதியை வைத்து அதையே பார்ட்-2 வாக எடுக்கப்போவதாக சில வம்பர்கள் செய்திகளைக் கொளுத்திப் போட்டிருந்தார்கள்.

மிருகத்துக்குப் பிறகு மீண்டும் ஆதியுடன்

கூட்டுச்சேர்ந்தசரித்திரம்தரித்திரம் பிடித்து பாதியில் நின்ற நிலையில், அடுத்து தான்சிந்து சமவெளிமூலம் சந்துபொந்தெல்லாம் பிரபலப்படுத்திய அமலாபால், தன்னுடன் சேர்ந்து டீ குடிக்கக்கூட ப்ரஸ்டீஜ் பார்க்கும் நிலையில், சூப்பர் குட் சவுத்ரியின் சூப்பர் சன் ஜித்தன் ரமேஷை வைத்து படம் இயக்கும் தற்கொலை முயற்சியில் இருந்து தப்பி, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்த நிலையில், மிருகம் பார்ட்-2’ செய்தியைப் படித்த சாமி, ‘ஆஹா இப்பிடியொரு பொழப்பு இன்னும் நமக்கு மிச்சமிருக்கா?’ அப்ப நம்ம கிட்ட அறை வாங்கின பத்மப்ரியா கிட்ட, திரும்ப ரெண்டு அறையை வாங்கியாவது அவளையும் உள்ள இழுத்துற வேண்டியதுதான்என்று சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க, அதே செய்தி படித்து அப்செட்’ஆன ஹீரோ ஆதியோ, ஆதியோடந்தமாய் ஆடித்தீர்த்து விட்டாராம்.

மிருகத்துல காளை மாடு, ‘அரவான் எருமை மாடுன்னு தொடர்ந்து மாடுகள் கூட வேலை செஞ்சி அலுத்துப்போச்சி. அதனாலபார்ட்-2 பண்ற நான்சென்ஸ் ஐடியாவெல்லாம் சுத்தமா எனக்கு இல்லை. ஆளை விடுங்கடா சாமிகளா? என்கிறார்.

அப்ப சரித்திரம் திரும்புகிறதுங்குறது மனிதர்களுக்கு மட்டும்தான், மிருகங்களுக்கு பொருந்தாது போல. அப்படித்தானே சொல்ல வர்றீங்க ஆதி?

aathi-2

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.