thulli-vilayadu-news

வின்செண்ட் செல்வா இயக்கி முடித்து வெளிவரத்தயாராக இருக்கிறது துள்ளி விளையாடு. ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.
நகைச்சுவை கலந்த த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

இந்தப் படம் சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது. படத்தினைப் பார்த்து விட்டு இயக்குனர் வின்செண்ட் செல்வாவை மிகவும் பாராட்டியிருக்கிறார் விஜய்.

“கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படம் புதியவர்கள் நடித்த படம் போன்றே தெரியவில்லை… நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும்  யுவராஜ், சென்றாயன் மற்றும் பரோட்டா சூரி ஆகிய மூன்று பேருக்கும் இடையே நடக்கும் டக் ஆஃப் வாரை ரசிகர்கள் நிச்சயம் மிகவும் விரும்புவார்கள்..” என்றாராம்.

U சான்றிதழ் பெற்றிருக்கும் துள்ளி விளையாடு விரைவில் வெளியாகவிருக்கிறது. தியேட்டரில் ரசிகர்கள் துள்ளி விளையாடுவார்களா அல்லது துள்ளியோடுவார்களா ?  தள்ளி நின்று பார்ப்போம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.