kanniyum-3-kalavanihalum-news

சிம்பு தேவனின் படங்களும், கதைகளும் எல்லாமே வித்தியாசமாகவே இருக்கும். இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் வரிசையில் அடுத்து அவர் இயக்கவிருக்கும் படம் கன்னியும் மூன்று களவாணிகளும்.

கலைஞர் குடும்பத்து வாரிசு அருள் நிதி தான் நாயகன். பிந்து மாதவி, அஷ்ரிதா ஷெட்டி நாயகிகள். பகவதி, கார்த்திக், சபேஷ் போன்றோர் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு. மோகனா மூவிஸ் பெயரில் தயாரிப்பது சாட்சாத் மு.க.தமிழரசுவே தான்.

சிம்புதேவன் படத்தைப் பற்றி சொல்லும்போது ‘வழக்கமான என்படங்கள் போலவே இதுவும் இருக்கும். உணர்வுகளைப் பேசும் சில காட்சிகளுடன் பெருமளவில் கலகலப்பான காமெடியாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வெறும் காமெடியாக இல்லாமல் காதல் கலந்த காமெடியாக இது இருக்கும்’ என்றார்.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.