நம் நாட்டு புராணங்களிலும், கோயில் சிற்பங்களிலும் காணப்படும் சிங்கமுகமும், சிங்கம் போல பலமும் கொண்ட பறவைதான் யாழி. யாழியின் புராணகாலத்துப் பெயர் சரபம் என்பதாகும். இந்த அரிய தமிழ்ப்பெயரை தான் எழுதி இயக்கும் படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் அருண்
மோகன்.
யாழி என்கிற பெயர் வேறு ஒருவரால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார். இந்த விலங்கினைப் போன்ற குணம் கொண்ட மூன்றுபேரைச் சுற்றி நடக்கிற த்ரில்லர் கதை இது. எந்தத் தவறுகளையும் செய்யத் தயங்காத குணமுடையவர்களைப் பற்றிய கதை இது.
நவீன் சந்திரா, புதுமுகம் சலோனி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். நூறு பெண்களுக்கு தேர்வு வைத்து இறுதியில் சலோனியைத் தேர்வுசெய்திருக்கிறார்கள். முழுப்படப்பிடிப்பும் ஒரே மாதத்தில் முடித்துவிட்டார்களாம். பின்தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன.