ஜீவா சங்கரின் இயக்கத்தில் ஆர்யா தயாரித்து நடிக்கும் படம் ‘அமர காவியம்’ இதன் பெரும்பாலான வேலைகள் முடிவடைந்து படம் ரெடியாகிவிட்ட நிலையில் படத்தை நெருங்கியவர்களிடம் திரையிட்டுக் காட்ட விரும்பினார் ஆர்யா.
தஞ்சையில் 80களில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சியை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை தனது பெண் நண்பி என்கிற முறையில் நயனுக்கும் மற்றும் சில நண்பர்களுக்கும் போட்டுக் காட்டியுள்ளார்.
வழக்கமான ஒரு படம் என்று வந்திருந்த நயன்தாரா படம் முடிந்ததும் கண்கலங்கி விட்டாராம். காரணம் படத்தின் கதையில் அவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலான காட்சிகளும் இடம் பெற்றிருந்ததால் மனம் உருகிவிட்டாராம் நயன்.
நயன் அழுதா அதைப் பார்த்து நம்ப கண் கலங்காதோ ?! அப்போ படம் சூப்பர் ஹிட்டுதான்.