பார்த்திபனின் கதை, திரைக்கதை படம் அவருக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து தோல்விகளாகவே வந்தாலும் பரிசோதனை முயற்சிகளாகவே தனது படங்களை தொடர்ந்து செய்து வந்த பாரத்திபன் இந்த வெற்றியால் மீண்டும் புத்துயிர் வரப்பெற்றிருக்கிறார்.
குறும்பட இயக்குனர்கள் தமிழ் சினிமாவை புதுவிதமாக மாற்றியமைத்த பின்பு அவருக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி நிறைய பழைய இயக்குனர்களுக்கும் தெம்பை தந்திருக்கிறது. இதே வேகத்தில் மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ள பார்த்திபன் திரும்பவும் கதையில்லாமல் ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறாராம்.
வெற்றியை அப்படியே காப்பியடித்தால் அது ஓடும் என்கிற மூடநம்பிக்கைக்குள் அவர் சிக்காமலிருக்கும் பட்சத்தில், கதையையும் வலுவான திரைக்கதையின் பலத்தையும் நம்பி படமெடுக்கும் பட்சத்தில் அவர் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கின்றன.