’இணையதளத்தில் கிசுகிசு எழுதுகிற மச்சான்ஸ்களின் வெளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் அப்படி ஒருவர் கொளுத்திப்போட்ட செய்தி ஒரு குழந்தையின் உள்ளத்தை கொந்தளிக்கச்செய்துவிட்டது.

அந்த பச்சக்குழந்தை வேறு யாருமல்ல.நம்ம நமீதான்.

‘நான் கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக வந்த செய்தி அபாண்டமானது. இப்போதைக்கு அல்ல எப்போதுமே திருமணம் என்ற ஒன்றை செய்துகொள்கிற எண்ணமே எனக்குக்கிடையாது. எனக்குப் பொதுச்சேவையில்தான் ஆர்வம் அதிகம்.மக்களுக்காக எதாவது செய்துகொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன். எனவே இனியாவது என்னைப்புரிந்துகொண்டு யாருடனும் எனக்கு திருமணம் செய்துவைக்காமல் பிரம்மச்சாரினியாகவே என்னை இருக்கவிடுங்கள். என் ரசிகர்களும் மச்சான்ஸ்களும் என்னை அப்படி இருக்கும்படியே விரும்புகிறார்கள்’ என்கிறார் நமீதா.

எனவே இனி நமீதா திருமணம் குறித்து கிசுகிசு எழுதுகிறவர்கள் குழந்தை திருமண தடுப்புச்சட்டத்தின் கீழ் புகார் செய்யப்படுவர்கள் என்று நாம் நமீதா நற்பணி மன்றன் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறோம்.

Related Images: