அஜீத்தின் நீண்டகால நண்பரும் அவரது மேனேஜருமான சுரேஷ் சந்திராவின் பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு துவங்கி `அஜீத் சாருக்கு ஹார்ட் அட்டாக்;மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்;

அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்` என்றொரு இடிச்செய்தியை யாரோ ஒரு வயித்தெரிச்சல் பார்ட்டி நேற்று இணையங்களில் பரப்பிவிட ஆடித்தான் போனார்கள் அஜீத் ரசிகர்கள்.

செய்தி பரவிய சில நிமிடங்களில் ஒரிஜினல் சுரேஷ் சந்திரா தனது முகநூல் பக்கத்திலும் ட்விட்டரிலும் `அச்செய்தி முற்றிலும் தவறானது. அஜீத் சார் நலமாக உள்ளார்` என்று பதற்றத்துடன் பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இச்செய்தியை பரப்பியவர் குறித்து இன்று அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Images: