இப்படிச் சொல்லி ரசிக நெஞ்சங்களில் பால் வார்த்துள்ளார் அரண்மனை  2 பேய்களில் ஒருவரான த்ரிஷா.

போன வருடம் தொழிலதிபர் வருண் மணியனுடன் காதல் கொண்டிருந்த த்ரிஷா, பெற்றோர் சம்மதத்துடன் கடந்தாண்டு ஜனவரி 23ம் தேதி திருமணம் செய்யவும் நிச்சயம் செய்து கொண்டார்.

ஆனால் நிச்சயதார்த்தமான சில நாட்களிலேயே கருத்து வேறுபாடால் த்ரிஷா – வருண்மணியன் பிரிந்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் த்ரிஷா.  சுந்தர்.சி இயக்கத்தில் த்ரிஷா கவர்ச்சிப் பேயாக நடித்த படம் ‘அரண்மனை 2’ வெளியாவதை ஒட்டி தனது ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

என்னை கட்டிக்குவீங்களா ? என்ற ஒரு ரசிகர் நேரடியாகவே கேட்க  “இல்லை. இப்போதைக்கு கல்யாணத்தில் எனக்கு விருப்பமே இல்லை” என்று பதில் கூறியுள்ளார் த்ரிஷா. அவர் கூறியதற்கு ஏற்றார் போல த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அப்புறம் ஏன் த்ரிஷா தேவையில்லாமல் கல்யாணம் செய்து ரிட்டையர்ட் ஆகவேண்டும் ? நீங்களே சொல்லுங்க பாஸ். த்ரிஷாவிற்காக இன்னும் காத்துக் கொண்டிருப்பவர்கள் பதறாமல் பொறுமையுடன் வெய்ட் செஸ்துனானே.

Related Images: