2008-ம் ஆண்டு பூஜை போடப்பட்டு, சில தினங்களே ஷூட்டிங் நடந்து, மூன்று வருடங்களாக நீண்ட சயனத்திலிருந்த, சிலம்பரசனின் ‘போடா போடி’ படம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இந்த எதிர்பாராத நிகழ்வால், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை விட அதிக உற்சாகத்துக்கு ஆளாகியிருப்பவர் படத்தின் நாயகியும், படம் வராத லட்சுமி’ என்று புறம் பேசப்பட்டவருமான வரலட்சுமி சரத்குமார்.’போடா போடி’ மூன்று வருடங்களாக கிடப்பில் இருந்ததால், வேறு பட வாய்ப்புகள் வராமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த வரலட்சுமி, இப்போது பாங்காக்கில் சிம்புவை போடா வாடா’ போட்டு அழைதுக்கொண்டிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் குமாருக்கு, திடீர் சர்ப்ரைஸாக கால்ஷீட் தந்ததோடு நில்லாமல், படத்தின் இயக்குனரை அழைத்து, கதையிலும் பெரிய மாற்றம் செய்தாராம் சிம்பு.முன்பு வெறுமனே ஒரு காதல் கதையாக மட்டும் இருந்த ‘போடா போடி’யை மூன்று ஆண்டுகளில் மூன்று பருவங்களில் நடக்கும் கதையாக மாற்றி, படம் தாமதமானதை சரிக்கட்டினாராம்.

நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கி நடித்து வந்த சிம்பு, அதைப்பாதியில் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது திடீரென ‘போடா போடி’ மீது அக்கறை செலுத்தி, பாங்காக்கில் படப்பிடிப்பை ஆரம்பித்தது கண்டு மிகவும் அப்செட் ஆகிவிட்டாராம் சக்கரவர்த்தி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.