தனது ’கடல்’ பட வலையில் சிக்காமல் சமந்தா சமயோசிதமாக, தப்பிப்போனதிலிருந்து, இறால் மீன் விலைக்குறைப்பால் மனம் வாடிப்போன மீனவர் போலவே ஆகிவிட்டார் மணிரத்னம்.

சமந்தா வெளியேறியதற்கான காரணம் குறித்து கடலில் எத்தனை வகையான மீன் உண்டோ அத்தனை வகையான யூகங்கள் சொல்லி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது அடுத்த கதாநாயகி குறித்து ஆராயவேண்டிய கால கட்டாயத்துக்கு நாமெல்லாம் உந்தி தள்ளப்பட்டிருக்கிறோம்.

இதுவரை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் கூட வெளியில் வராமல் வளர்க்கப்பட்ட ராதாவின் இரண்டாவது மகள் துளசிதான் மணியின் அடுத்த நாயகி என்ற யூகங்களை இதுவரை அவர் தரப்பு மறுக்கவில்லை.

தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதே ஆன துளசி, இதற்கு முன் அதே கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்ட 23 வயதான சமந்தாவுக்கு பதிலாக எப்படி பொருந்துவார் என்ற கேள்வி ஒரு புறமிருக்க, துளசியின் படிப்பை நிறுத்தச்சொல்லிவிட்டு, மணியும், சுஹா சினியும் அந்தமானுக்கு அழைத்துச்சென்றிருக்கிறார்களாம்.

கடந்த ஒரு வாரமாக துளசிக்கு, காதலிப்பது எப்படி, பாறைக்குப்பின்னால் ஒளிந்துகொண்டு கிஸ் பண்ணுவது எப்படி ? என்பது போன்று அங்கு கடுமையான நடிப்புப்பயிற்சி தரப்பட்டு வருகிறது.

நமக்கு கிடைத்த தகவலின்படி, துளசி இன்னும் சில ஆண்டுகளாவது படிப்பை தொடர ஆசைப்படுகிறாராம். ராதாவே, ‘இந்த மாதிரி சான்ஸ்ல்லாம் அவ்வளவு ஈஸியா கிடைக்காது. போ டைரக்டர் சொல்றபடி கேளு’ என்று மிரட்டி அனுப்பிவைத்தாராம்.

ஒன்பதாங்கிளாஸ் படிக்கிற பொண்ண, இவ்வளவு டார்ச்சர் பண்ற ராதாவையும் மணிரத்னத்தையும் குழந்தைத்தொழிலாளர் நலவாரியத்துக்காரங்க ஏதாவது செய்ய முடியாதா?

பின்குறிப்பு: செய்தியை முடித்துவிட்டு கூகுளில் ராதாவின் மகள் துளசி நாயர் என்று தேடியபோது கிடைத்த,கமல் மகள் அக்‌ஷ்ரா போலவே காட்சி அளிக்கும், ஊர்ஜிதப்படுத்த முடியாத ஸ்டில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.