’முத்தக்களறியிலிருந்து ரத்தக்களறி வரை எதையும் விட்டுவைப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டார் போலும் ஷ்ரேயா.

சமீபத்தில் தனது அரைநிர்வாணப் படங்களை வெளியிட்டு வாலிப வயோதிக அன்பர்களை ‘சேது’களாக மாற்றி ஏகப்பட்ட சேதாரங்களை உண்டாக்கிய ஷ்ரேயா, தான் இப்போது நடித்துவரும் கன்னட, தமிழ் தயாரிப்பான ‘சந்திரா’வுக்காக களறி யுத்தமும் செய்திருக்கிறார்.

இதற்காக கேரளாவில் களறி பயிற்றுவிப்பதில் பெரும் விற்பன்னரான சாகர் ஆசானிடம் இரண்டு மாதங்களுக்கும் மேல் பயிற்சி எடுத்துக்கொண்ட ஷ்ரேயா, படத்தில் களரி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியபோது, களறி பயிற்றுவிக்க வந்த மாஸ்டர் ரவிவர்மா, படத்தின் இயக்குனர் ரூபா ஐயர் உட்பட மொத்த படக்குழுவினரையும் திகைப்பில் ஆழ்த்தினாராம்.

களறியில் விசேஷ பயிற்சி பெற்றவரான ரூபா ஐயர், ‘சந்திரா’வில் ஷ்ரேயாவுக்கும், கன்னட புதுமுக நடிகர் ப்ரேமுக்கும் இடையில் நடைபெறும் காமக்கிளர்ச்சி மிகுந்த காதல் காட்சி ஒன்றைத்தான் களறி கலந்து விருந்தாக்க இருக்கிறாராம்.

‘’ ஷ்ரேயா நடனத்தில் பின்னி எடுத்துவிடுவார் என்பது எனக்குத்தெரியும். ஆனால் வெறும் இரண்டே மாதகால பயிற்சியில் களறியில் காமம் கலந்து, புதுமுகம் பிரேமை கைமா பண்ணிவிடுவார் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ என்கிறார் ரூபாஐயர்.

இந்தப்பாடல் காட்சியில் மட்டும் சென்சார் கைவைக்காமல் இருந்தால், சமீபத்தில் மாக்ஸிம் அட்டைக்கு ஷ்ரேயா கொடுத்த போஸ்களெல்லாம் ஜூஜுபி மேட்டர் என்று சொல்லும் அளவுக்கு எக்ஸ்போஸ் செய்து நடித்திருக்கிறாராம் ஷ்…ரேயா.

ஆமா, பழைய நிலவரப்படி, தமிழ், கன்னடம் ரெண்டுமொழிகள்லயுமே ஷ்ரேயாவை கணேஷ் வெங்கட்ராமன் தானே லவ் பண்றதா இருந்துச்சி? இந்த கன்னட பிரேம் எப்ப, எப்பிடி ஃப்ரேமுக்குள்ள வந்தார் ரூபா மேடம்?.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.