kiliyar-15oct12-tr-power-movie

  தமிழகம் முழுமையும் அடாது பெய்து வரும் மழை, அதை ஒட்டி இன்னும் கொஞ்சம் அதிகமாகியிருக்கும் டெங்கு பீதிக்கு அடுத்த படியாக, தன் பங்குக்குதிருத்தணிபட க்ளைமேக்ஸ் மூலம், ரசிகர்களுக்கு வேறுவிதமான மரண பீதியை உண்டாக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் பேரரசு.

திருத்தணிரிலீஸாவது சந்தேகம்,

அடுத்த படங்கள் தமிழில் எதுவும் இல்லாததால் மலையாள படங்களை இயக்கிக்கொண்டு, கேரளாவின் மலைவாசஸ்தலம் ஒன்றில் செட்டிலாகி, பின்னாட்களில் மலையாள மாந்த்ரீகர் ஆகும் முடிவிலிருக்கிறார் பேரரசு என்னும் செய்தி, ஆனந்த தேன் வந்து பாயுது காதினிலேஎன்று மகிழ்ந்திருந்த, தமிழக ரசிக ஜனங்களின் நெனப்பில் இடி விழுந்து கடந்த வெள்ளியன்று ரிலீஸானதுதிருத்தணி’. சரி இத்தோட விட்டது சனிஎன்ற எண்ணத்தில், மழைக்கு ஒதுங்க இடமின்றி, தியேட்டருக்குள் நுழைந்த ஒன்றிரண்டு ரசிகர்கள் வெலவெலத்துப்போகும்படி, க்ளைமேக்ஸில் ஒரு வெடிகுண்டு தகவலை தூக்கிப்போட்டிருக்கிறாராம் பேரரசு.

,நம்ம டைரக்டரைத் தவிர, நாட்டிலுள்ள அனைத்து துஷ்ட சக்திகளையும் அழித்துவிட்டோம்என்ற நினைப்பில் பரத், க்ளைமேக்ஸில் கிளம்பும்போது, மறுபடியும் மூன்று வில்லன்கள் தங்கள் அட்டகாசத்தை ஆரம்பிக்க, அவர்களை நோக்கி, மூன்று தோட்டாக்களை வீச,’’ டேய் நீ யார்றா. படம் முடிஞ்சி போச்சின்னு நெனச்சோம். நீ இன்னுமா இங்கயே தங்கியிருக்கே?’ என்று கேட்க, பரத்நான் சாமிமலைடாஎன்று பரத், பேரரசு கூட்டணியின் அடுத்த புராக்டை அறிவிக்கிறார்களாம்.

மறுபடியும் இவிங்க வருவாய்ங்களோ?’ என்று மனசே சரியில்லாமல் தியேட்டரை விட்டு திரும்புகிறார்களாம் அப்பாவி சனங்கள்.

என்னடா பேரரசு பத்தி எழுதிட்டு டி.ஆர்.ஸ்டில்லைப் போட்டிருக்கானுகளேன்னு குழம்பாதீங்க. ‘ சாமி மலை’ படத்துல அண்ணன் டி.ஆரு. ஒரு முக்கியமான டீட்டியாரு கேரக்டர்ல நடிக்கிறாராம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.