கலகலப்பு @ மசாலாகபேயில் காட்டிய கவர்ச்சிக்குப் பின் ஒரே கவர்ச்சி ரோலாக வந்ததில் கொஞ்சம் கதிகலங்கிக் காணாமல் போனார் அஞ்சலி. நடுவில் இயக்குனருடன் பிரச்சனை, தொழிலதிபருடன் திருமணம் என்றெல்லாம் பரபரப்பாக செய்திகள் வந்து எல்லாம் கடைசியில் புஸ்வாணமாகியும் விட்டன.
கோலிவுட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக மேலும் தமிழ்ப்படங்கள் வராமல் தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தார் அஞ்சலி. தற்போது நடித்துவரும் படத்துக்குப் பின் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக இன்னொரு தெலுங்குப் படத்திலும் நடிக்கிறார். “தற்போது என்னைச் சுற்றி நின்ற பிரச்சனைகள் அனைத்தும் ஓய்ந்துவிட்டன. இனிமேல் தமிழ்ப்படங்களிலும் நடிக்க கதைகேட்டு வருகிறேன்” என்றார் அஞ்சலி.
அவர் சொல்லி முடிக்கும் முன்பே, “அஞ்சலி என்னுடைய படத்தை நடித்து முடிக்காமல் வேறு யார் படத்திலும் நடிக்க விடமாட்டேன்” என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார் இயக்குனர் களஞ்சியம். அவரது ‘என் ஊர் சுற்றிப் புராணம்’ என்கிற படத்தை ஒரே ஷெட்யூலில் நடித்துக் கொடுக்கிறேன் என்றுவிட்டு ஒருவருடமாய் இழுத்தடித்து இன்னமும் முழுதாய் நடித்து முடித்துக் கொடுக்கவில்லையாம் அஞ்சலி.
என்னமோ நடக்குது.