இயக்குனர் கோவிந்தமூர்த்தியின் கருப்பசாமி குத்தகைதாரர் படம் நல்ல வெற்றி பெற்றது. அதன் பின்பு வந்த காமெடிப் படமான வெடிகுண்டு முருகேசன் சுமாராகப் போனது. இப்போது அப்பா – மகன் உறவை மையமாக வைத்து அவர் இயக்கிவரும் படம் பப்பாளி.
தாய்க்கும் மகளுக்குமிடையேயான ஆத்மார்த்த உறவு போல சமயங்களில் தந்தைக்கும் மகனுக்குமிடையேயான உறவும் ஆழமானது. தாத்தாவின் நிறைவேறாத ஆசை அப்பாவின் தலையில் ஏறும். அப்பாவின் லட்சியங்கள் மகன்கள் மேல் திணிக்கப்படும். கையேந்திபவன் வைத்திருப்பவரின் மகன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக ஆசைப்படுகிறான். அவருடைய கனவோ தன்னைப் போலல்லாமல் தன் மகன் ஒரு சரவண பவன் போன்ற ஒரு ஹோட்டலுக்கு முதலாளியாகிவிடவேண்டும் என்பது.
“சிறுவயதில் நான் உன் கைப்பிடித்து நடந்தேன். வளர்ந்து ஆளாகிவிட்ட பின்னரும் ஏனப்பா உங்கள் கைப்பிடித்தே நான் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அப்பாவைப் பார்த்து மகன் கேட்பது தான் கதை. செந்தில், இஷாரா, சிங்கம் புலி, ஜெகன், இளவரசு போன்ற பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.