சமீப வருடங்களில் தமிழ்நாடே டாஸ்மாக்க்குகளில் குடித்துவிட்டுத் தள்ளாடும்போது பணத்தில் கொழிக்கும் நடிக, நடிகைகள் அதையே ஸ்டைலாக மிட்நைட் பார்ட்டிகளாகக் கொண்டாடும் பழக்கம் அதிகரித்திருக்கிறது.
நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, பிந்து மாதவி, தனுஷ், சிம்பு, ஆர்யா, சிவகார்த்திகேயன் உட்பட லேட்டஸ்ட ஹிட் நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் நள்ளிரவுப் பரர்ட்டிகளில் தவறாது கலந்துகொள்கிறார்கள். பிறந்த நாள், கல்யாண நாள், படம் கிடைத்தது, படம் ஓடியது, தயாரிப்பாளர் ஓடியது என்று சகலவிஷயங்களுக்கும் நள்ளிரவுப் பார்ட்டிகள் வைத்து குடித்து கும்மாளம் போட்டு காலையில் கிளம்பிச் செல்வார்கள்.
இதிலிருந்து சமீபகாலமாக எஸ்கேப் ஆகிவருபவர் ‘ப்ரியா ஆனந்த்’. காரணம் இவர் பார்ட்டி ஒன்றில் ஜாலியாக இருந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிடப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டார். இந்தப் பார்ட்டிகள் முடிந்ததும் பார்ட்டி நிகழ்வுகளை பலரும் ட்விட்டர், பேஸ்புக் என்று பல இணையதளங்களில் பெருமையாக ஷேர் செய்ய அதில் பல வில்லங்கங்களும் வெளியே வந்துவிடுகின்றன. அதனாலே ப்ரியா ஆனந்த் இந்த முடிவு எடுத்திருக்கிறாராம்.