siranjeevi-story-crore

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக கொடிகட்டிப் பறந்தவர். வயதாகியபின் படங்களில் நடிப்பதை விடுத்து ரசிகர்களின் பலத்தின் பின்னணியில் தனிக்கட்சி ஆரம்பித்தார். பின்பு அப்படி இப்படிப் போய் கடைசியில் கட்சியே வேண்டாம் என்றுவிட்டு இப்போது மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

நிறையபேரிடம் கதை கேட்டும் அவருக்குப் பிடித்த, பொருத்தமான கதை எதுவும் கிடைக்கவில்லை.  அதனால் தனக்குப் பிடித்தமான கதை சொல்பவருக்கு ஒருகோடி ரூபாய் பரிசு தருவதாக அறிவிதித்திருக்கிறார்.

கதை கேட்பதற்காகவே ஒரு குழு அமைத்திருக்கிறாராம். கதை சொல்பவர்கள் அந்தக் குழுவிடம் கதைசொல்ல வேண்டும். அவர்களுக்குப் பிடித்திருந்தால் பின் சிரஞ்சீவி அந்தக் கதையை கேட்பாராம். அவருக்கும் பிடித்துவிட்டால் ஒருகோடி ரூபாய் கதைக்குக் கிடைக்கும்.

அதுசரி. கதைசொல்லும் குழு கேட்கும் கதைகள் எதுவும் திருடப்படாமல் நேராக சிரஞ்சீவிக்குச் செல்லும், கதை சொல்பவருக்கு ஒருகோடிப் பணம் கிடைக்கும், என்பதற்கு இந்தக் காலத்தில் ஏதும் உத்திரவாதம் இருக்கிறதா?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.