’ ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்ற ஒன்று நடந்துதான் ஆகவேண்டுமென்றில்லை. எனக்கெல்லாம் மனதுக்கு பிடித்த சரியான மாப்பிள்ளை கிடைக்காவிட்டால், கடைசிவரை திருமணம் செய்துகொள்லாமலே சந்நியாசினி ஆகவே இருந்துவிடுவேன்’

வயசாகிக்கிட்டே யாரையும் லவ் பண்ணலியா? கல்யாணம் எப்போ? என்று யார் கேட்டாலும் நடிகை பத்மப்ரியாவின் வாயிலிருந்து மேற்படி பாணியில் தான் அதிரடி பதில்கள் வரும்.

காலம் கனிந்து இப்போது பத்மப்ரியாவின் கனவுக்கண்ணன் ஒருவழியாக திருமணமும் முடித்துக்கொண்டுவிட்டார். கணவர் பெயர் ஜாஸ்மின். மீரா ஜாஸ்மினுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ப்ரியா நியூயார்க் சென்றிருந்தபோது, அங்கு ஐஐடியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துக்கொண்டிருந்த ஜாஸ்மின் மீது மைய்யல் கொண்டு திருமணம் செய்யும் முடிவு எடுத்தாராம்.

எந்தவிதக்குழப்பமுமின்றி திருமணத்துக்குப் பிறகு நாலுகால் பாய்ச்ச்லில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் ப்ரியா.

படங்களின் எண்ணிக்கையில் சுமார் அரை சதத்தைத் தொடவிருக்கும் பத்மப்ரியா சில விருதுகள் வாங்கியிருந்தாலும், சேரன் போன்ற இயக்குநர்களின் கைப்பக்குவத்தை கடந்து வந்திருந்தாலும் ஏனோ முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருபோதும் அவர் இருந்ததில்லை. இனியாவது அது வாய்க்குமா என்று பார்ப்போம்.

ப்ரிய திருமண வாழ்த்துக்கள் பத்ம ப்ரியா அக்கா

Related Images: