’என்னை அறிந்தால்’ படத்துக்கு பேசாமல் ‘என்னை அரிந்தால்’ என்று பெயர் வைத்திருக்கலாமோ என்று சொல்லுமளவுக்கு படத்தை மூன்றாவது முறையாக அரிந்துகொண்டு இருக்கிறார் கவுதம் வாசுதேவ மேனன்.

சென்சாருக்கு அனுப்பும்போது மூன்று மணிநேரம் மூன்று நிமிடங்களாக இருந்த படத்தை அஜீத் மற்றும் ஏ.எம்.ரத்னம் வேண்டுகோளுக்காக 15 நிமிடங்கள் குறைத்து 2.48 நிமிடங்களாக அனுப்பினார். அதே நீளத்தில் தியேட்டருக்குப்போன படத்தில் முதல் பாதியில் சில காட்சிகள் போரடிக்கிறது என்று ரிப்போர்ட் வரவே நேற்று மீண்டும் படத்தின் நீளம் 6  நிமிடங்கள் குறைக்கப்பட்டு தற்போது படம் 2.42 ஆக்கப்பட்டுள்ளது.

ஹிட் படம்தான்.  ஆனால் படத்தின் ரிப்போர்ட்டும் வசூலும் முதல் நாள் இருந்த அளவுக்கு நீடிக்கவில்லை என்கிறார்கள். இப்படத்தின் மூலம் அஜீத்துக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தாலும் தொடர்ந்து போலீஸ் கதைகளாக இயக்கிய வகையில் கவுதமுக்கு இமேஜ் கொஞ்சம் டேமேஜ்தான்.

‘ஆரண்யகாண்டம்’ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கு திரைக்கதையில் உதவி என்ற சொத்தியான கார்டு போட்ட வகையில் சினிமாக்காரர்கள் மத்தியிலும் ’போலீஸ்கார்’கவுதம் ‘கள்ளன்’ என்றே பார்க்கப்படுகிறார்.

Related Images: