புதுமுக இயக்குனர் ஜே வடிவேல் இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘கள்ளப்படம்’. சினிமாவில் சாதிக்கப் போராடும் நான்கு இளைஞர்களின் கதையாக கொண்ட இப்படம் மார்ச்20 ஆம் தேதி வெளிவருகிறது. இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டும் இடம்பெறுகிறது. ‘வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள்  வரிசையில், இயக்குனர் மிஷ்கினின்  வரிகளில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும் ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல் தான் அது.

இயக்குனர் மிஷ்கினின் சிஷ்யரான வடிவேல் கூறுகையில் “மிஷ்கின் சார் தனது படங்களில் பாடல்களை தவிர்க்கப் போவதாக கூறியுள்ளார். எனது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவருள் இருக்கும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் இப்பாடல் அவரது முந்தைய பாடல்களை போலவே படமாக்கப்பட்டுள்ளது”.

“இந்த பாட்டு ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சியாக படத்தில் வருகிறது. அந்த பாடல் மிஷ்கின் சார் பாடல்கள் போல் ஒரு துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் பிடித்திருந்தது. மிஷ்கின் சாரையே எழுதக் கேட்டு பின் பாடவும் கேட்டோம். இரண்டையும் எங்களை வாழ்த்தும் வகையில் செய்துக் கொடுத்தார் எனது குரு ” என்று முழு பூரிப்புடன் கூறினார் இயக்குனர் வடிவேல்.

குரு கிட்டே குரு தட்சிணையா குத்துப் பாட்டாங்க கேக்குறது ?!

Related Images: