எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயரில் பொய்யும் புரட்டுமாக தன்னைத்தானே பாராட்டி கவிப்பொய்யரசு வைரமுத்து எழுதிய கடிதம் இணையங்களிலும் பத்திரிகைகளும் நாறடிக்கப்பட்டதைக் கண்டு மனம் புழுங்கிவிட்டாராம் வைரமுத்து.

‘செய்தது சிறுபிழைதான்.அதற்காக பலமுறை தேசிய விருதுகள் வாங்கிய என்னை பத்திரிகையாளர்கள் இந்த அளவுக்கு எள்ளி நகையாடுவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித்தள்ளிய வைரமுத்து, ‘இந்த தவறுக்கு நான் பிராயச்சித்தம் செய்தே ஆகவேண்டும்’ என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.

அதன்படி தற்போது கைவசமுள்ள ஒன்றிரண்டு பாடல்களை எழுதி முடித்துவிட்டு, சினிமாவுக்கு பாடல்கள் எழுதுவதிலிருந்து நிரந்தர ஓய்வெடுக்கப்போகிறாராம்.

’அவர் செய்த மாபெரும் குற்றத்திற்கு இது சாதாரண தண்டனைதான். ஓய்வெடுப்பதற்கு முன் வைரம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்கிறது ஜெயகாந்தன் வாசகர் வட்டாரம்.

Related Images: