சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ சுமாராகப் போனாலும், படம் ஹாலிவுட் படமொன்றின் தழுவல் என்றாலும், படத்திற்கான மெனக்கெடல்கள் படத்திற்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

அந்தத் தெம்பில் தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார் சிபி.  ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் பெயர் ஜாக்சன் துரை.  படத்திற்கு இசை சித்தார்த்த விபின். எடிட்டிங் விவேக் ஹர்ஷன்.  ஒளிப்பதிவு யுவா.  இயக்குனர் பர்மா படத்தை இயக்கிய தரணீதரன்.

கருணாகரனும் அப்பா சத்யராஜூம்  படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள். ஒரு ஆவியின் பீதியில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிராமத்திற்கு வரும் போலீஸ் அதிகாரி அவர்களை ஆவியின் பிடியிலிருந்து எப்படி காப்பாற்றினார் என்பது தான் கதை.

இந்தப் படத்திற்காக 10 கிலோ வெய்ட் குறைந்திருக்கிறாராம் சிபிராஜ்.  படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பிக்க இருக்கிறது.

Related Images: