‘ஒன்பது ரூபாய் நோட்டு` படத்தில் அறிமுகமாகி `அழகர்சாமியின் குதிரை, `மன்னாரு` `சுந்தரபாண்டியன்` என்று பல படங்களில் நடித்திருக்கும் அப்புக்குட்டி ‘வீரம்’ படத்தில் நடித்து வருகிறார். அப்போது ஒரு நாள் படப்பிடிப்பின்போது அஜித்  “தம்பி எல்லா படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். முடிந்தவரை படத்துக்கு படம் தோற்றத்தை மாற்றப் பாருங்கள். கிராமிய படங்களை தவிர நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்கும் வகையில் தோற்றத்தில் மாற்றம் வேண்டும்” என்று அறிவுரை சொன்னாராம்.

அப்புவோ “என்னை யார் சார் இப்படி எல்லாம் மாத்துவாங்க ? யார் சார் படம் பிடிப்பாங்க ? அதே கெட்டப்ல தான எதிர்பார்ப்பாங்க” என்று கேட்க சிரித்தபடியே சென்றுவிட்டாராம் அஜித். கடந்த 29ஆம் தேதி ‘ப்ரீயா இருந்தா ஸ்டுடியோ வாங்க’ என்று  அஜித்திடமிருந்து அழைப்பு.

அவர் சொன்னதும் உடனே அங்கே போன அப்புவுக்கு ஆச்சரியம். கேமரா, ஒப்பனையாளர், உடையமைப்பாளர் சகிதம் காத்திருந்த அஜித் அவரது கெட்டப்பை மாற்றும்படி அவர்களிடம் கூற வெவ்வேறு கெட்டப்பகளில் மாறிய அப்புவை புகைப்படம் எடுத்துக் கொடுத்திருக்கிறார் அஜித். தன்னையே அடையாளம் தெரியாதவராக ஆகிப் போன அப்புவின் ஒரிஜினல் பெயரான சிவபாலன் என்கிற பெயரை தெரிந்து வைத்து அவரை சிவபாலன் என்றே அழைத்தாராம் அஜித்.

அஜீத்தின் அன்பு தந்த ஆச்சரியத்தில் வாயை பிளந்தவன் இன்னும் மூடவே இல்லை.  இனிமேல் நானும் எனது பெயரை சிவபாலன் என்கிற அப்புக்குட்டி என்றே அழைக்கப்படுவதை விரும்புகிறேன். அஜீத் சார் எவ்வளவு நல்லவர் என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். அதை எனக்கு இப்போது கண்கூடாக உணர்த்திவிட்டார். அவர் காட்டிய அன்பை என் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன்’ என்கிறார் சிவபாலன் அப்புக் குட்டி.

Related Images: