ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘கத்தி’. சென்சிட்டிவான கார்ப்பரேட் அரசியலை மாஸ் கமர்ஷியலுடன் கலந்து கொடுத்து மாபெரும் வெற்றி பெற்ற படம் அது. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் வழக்கு, மத்திய அரசின் மீத்தேன் திட்டம், நதிகளையும் நீர்வளத்தையும் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பது பற்றியெல்லாம் தைரியமாக விமர்சனம் செய்த படம் கத்தி.

இப்படிப்பட்ட படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முதலில் அல்லு அர்ஜூன் மற்றும் பவன் கல்யாண் இருவரும் நடிக்க ஆர்வம் காட்டினர். பிறகு இதில் நடித்தால் எங்கே தேவையில்லாத அரசியல் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிவருமோ என பயந்து தற்போது பின் வாங்கியுள்ளனர்.

விஜய் எந்த வித அரசியல் கமெண்ட்டுகளும் தராதவர்தான் என்றாலும் இந்த வகையில் நாம் விஜயின் தைரியத்தைப் பாராட்டிதான் ஆகவேண்டும்.

Related Images: