இயக்குனர் மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’ திரைப்படம் ஏ சென்டர்களில், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படத்தினை விரைவில் தொடங்க உள்ளார். இவர் தனது அடுத்த படத்திற்கான தலைப்பினை சமீபத்தில் ஃபிலிம் சேம்பரில் பதிவு செய்துள்ளார் என செய்திகள் வந்துள்ளன.

மணிரத்னம் தனது அடுத்த படத்தின் டைட்டிலை ‘வெள்ளைப் பூக்கள்’ என பதிவு செய்துள்ளார் என்றும் இப்படத்தில் கதாநாயகனாக நானி மற்றும் நாயகியாக சயாமி கேர் நடிக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி இப்படம் டிசம்பரில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணியாற்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Images: