அதிரடிஇசையால் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அனிருத் வேதாளம் பாடல்கள் ஹிட்டாகிவிட்டதால் உற்சாகத்தில் இருக்கிறார்.

தற்போது இசையமைக்க புக் பண்ண வரும் இயக்குநர்களிடம் பாடலின் சூழலை புதுசாக கேட்டு வாங்கிறாராம். பழைய பாடல்களை குறிப்பிட்டு இந்த மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்காதீர்கள். பாடலுக்கான சூழலைமட்டும் சொல்லுங்கள், அதற்கு எந்த மாதிரியான டியூன் ரெடி பண்ணலாம் என்பதை நான் முடிவு செய்கிறேன் என்கிறாராம்.

சுறுசுறுப்பாக டியூன் போட்டுக் கொடுத்து இயக்குநர்களை ஆச்சரியப்படுத்திவிடுகிறாராம். கொலவெறி அனிருத்துக்கு இசை மேல் இப்படி திடீரென்று எப்படி கொல வெறி வந்ததென்று எல்லோரும் யோசிக்கிறார்கள்.

Related Images: