கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில் நடித்து முடித்துவிட்ட எஸ்.ஜே.சூர்யா, தனது அடுத்த படத்திற்கு தற்போது தயாராகிவிட்டார்.

அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘174’ என்ற படத்தை தயாரித்து ஒரு முக்கிய வேடத்திலும் அவர் நடிக்கவுள்ளார் அந்த முக்கிய வேடம் துப்பறியும் போலீஸ் வேடமாம்.

‘174’ என்பது இந்திய அரசியல் சட்டத்தின் எண் என்றும், இந்த படத்தில்தான் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக தான் நடிக்கவுள்ளதாக கூறிய எஸ்.ஜே.சூர்யா, இந்த படம் முதலில் காமெடியாக தொடங்கி போகப்போக சீரியஸாக மாறிவிடும் என்றிருக்கிறார்.

மேலும் மணிகண்டன் கூறிய இந்த கதையை தன்னை மிகவும் இம்ப்ரஸ் செய்ததாகவும், அதனால் அவரே தயாரித்து இயக்கவுள்ளதாகவும், 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

என்ன கதையாக இருந்தாலும் தொப்புள் தெரிய நாலு ஹீரோயின்கள் நாலு பாடல்களில் வருவது தான் எஸ்.ஜே.சூர்யாவின் ஸ்டைல். அப்புறம் அது என்ன கழுதை படமாகத்தான் இருக்கட்டுமே. ரசிகர்கள் பார்க்காமலா போய்விடுவார்கள் ?

Related Images: