மாமனார் சிவகுமாரின் கடுமையான எதிர்ப்பு கணவர் சூர்யாவின் முனுமுனுப்பு ஆகிய இரண்டையும் மீறி ‘36 வயதினிலே’ படத்தில் நடித்துவிட்டு சற்று ஓய்வெடுத்த ஜோதிகா மீண்டும் அதே எதிர்ப்பு நிலவிய நிலையிலும் இன்னொரு படத்தில் நடிக்க கமிட் ஆகியியிருக்கிறார்.

சுமார் 8 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஜோதிகாவுக்கு கடந்த ஆண்டு வெளியான 36 வயதினிலே படம் ரீஎன்ட்ரி கொடுத்தது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இதனால் தமிழில் தொடர்ந்து நடிக்க ஜோதிகா முடிவு செய்தார். ஆனால் அவரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதேபோல குற்றம் கடிதல் படத்திற்குப் பின் பிரம்மாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் திரையுலகினர் மத்தியில் நிலவியது. இந்நிலையில் குற்றம் கடிதல் படத்தின் மூலம் அனைவரையும் உருக வைத்த பிரம்மாவின் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கப் போவதாக கூறுகின்றனர். தற்போது பெண்களின் பிரச்சினைகளை அலசும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு அதற்கான கதை, விவாதத்தில் பிரம்மா ஈடுபட்டு வருகிறாராம். பெண்களை மையமாகக் கொண்ட படமென்பதால் ஜோதிகாவை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தது. இம்முறையும் ‘36 வயதினிலே’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது போலவே மாமனார் சிவகுமாரிடமிருந்து பலத்த எதிர்ப்பு. கணவர் சூர்யாவும் அப்பா வழியிலேயே தடுக்க நினைக்க ‘ஐ டோண்ட் கேர். இனி வீட்டுல அடைஞ்சி கிடக்கிறதா இல்ல. தொடர்ந்து நடிக்கப்போறேன்’ என்று தெறிக்க விட்டாராம் ஜோதிகா.

Related Images: