நடிகை பாவனா தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய  ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் தீபாவளி, அசல், வெயில், ஜெயம் கொண்டான், ராமேஸ்வரம் என பல படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறையவே தாய்நாடு மலையாளத்துப் பக்கம் சென்றார்.
பாவனா காதலில் விழுந்திருப்பதாக கிசு கிசு கிளம்பியது. பாவனா அதை மறுத்தார். தற்போது தனது காதல் பற்றி வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
“நான் ஒரு கன்னட சினிமா தயாரிப்பாளரை  நீண்ட நாட்களாக காதலித்து வருகிறேன். கடந்த 2014–ம் ஆண்டே நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் தொடர் படப்பிடிப்பு காரணமாக என்னால் முடியவில்லை. எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்துள்ளோம். இந்த வருடம் கண்டிப்பாக எங்கள் திருமணம் நடைபெறும். எனது காதலன் பெயர் மற்றும் விவரங்களை அதற்கான காலம் வரும் போது அனைவருக்கும் அறிவிப்பேன்” என்று நடிகை பாவனா கூறியுள்ளார்.
ஆகவே பாவனாவைக் கைப்பிடிக்க கனவு கண்டு வரும் ரசிகர்கள் யாராவது இருப்பின் அவர்கள் சோகப்பட்டு போகாமல் ஏதாவது ஒரு வாழமீனுக்கு வாழ்க்கை கொடுக்க ரெடியாகவும்.

Related Images: