தமிழக முதல்வராக மட்டுமல்ல எதிர்காலத்தில் இந்திய பிரதமர் ஆகும் ஆசையும் தகுதியும் எனக்கு இருக்கிறது`என்று சரத் திருவாய் மலர்ந்த நேரம் அவர் தெருவோரம் நிற்கும் நிலையில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது.

கடந்த 2006 முதல் 2015 வரை தொடர்ந்து மூன்று முறை நடிகர் சங்கத்தலைவராக இருந்த போது அவர் பலகோடிகளை சுருட்டிவிட்டதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த திருட்டு புகார்களுக்கு பதிலேதும் சொல்லாமல்  தொடர்ந்து மழுப்பி வந்த நிலையில்  இன்று நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர் பூச்சி முருகன் ஆகியோர் சென்னை கமிஷனரை நேரில் சந்தித்து சரத்குமார் மீது ஊழல் புகார் அளித்துள்ளனர். சரத்குமார் மீது பலகோடி ரூபாய் ஊழல் புகார் நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த விவகாரம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு திருடிய வடிவேலு போல் தன் மேல் சொல்லப்பட்ட புகார்களுக்கு சப்பைக்கட்டு கட்டுவதிலேயே குறியாக இருக்கிறார் வருங்கால இந்தியப் பிரதமர் சரத்.

Related Images: