நடிகர் அஜித் சம்பந்தமாக எது சொன்னாலும் அது காட்டுத் தீயாக பரவி விடுகிறது. சமீபத்தில் வீட்டில் பாம்பு வளர்ப்பதாக யாரோ கொளுத்திப் போட அதை நம்பிய வனத்துறை அதுபற்றி விசாரிக்க அஜித் வீட்டுக்கு போயிருக்கிறது.

ஆனால் விஷயம் ட்ராக் மாறி நடிகர் அஜித்திடம் மேனேஜராக பணியாற்றும் சுரேஷ் சந்திரா 3 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்றை தனது வீட்டில் வளர்த்து வருகிறார் என்றும், அதற்கு அவர் எலிகளை உணவாக கொடுத்து வந்ததாகவும் திரும்பவும் தகவல்கள் கசிந்தன.

இதனிடையே நடிகர் அஜித் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஊடகங்கள் சென்னை வனத்துறை தலைமையிட வனசரகர் மோகனிடம் கேட்ட போது, அஜித் வீட்டில் சோதனை நடந்ததாக கூறுவது உண்மையல்ல என்றும், அவரது மேனேஜரிடம் தான் இந்த பாம்பு வளர்ப்பு செய்தி பற்றி விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அஜித்தின் மேனேஜரும், பி.ஆர.ஓவுமான சுரேஷ் சந்திரா கூறுகையில், “என்னுடைய வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது அடிப்படை ஆதாரமற்றது” என்று தெரிவித்துள்ளார்.

கொளுத்திப் போடும் புண்ணியவான்களே, போடுறதுதான் போடுறீங்க. தல சிங்கம், புலி வளர்த்தார்னு போடலாம்ல. ஒரு கெத்தா இருக்கும்ல.

Related Images: