நெல்லை கண்ணன் NRC மற்றும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்த கண்டன கூட்டத்தில் பேசினார். பாஜகவின் இந்துத்துவா வையும், மோடி, அமித்ஷாவையும் வெளுத்து வாங்கிய அவர், அமித்ஷா தான் மோடியின் மூளை என்று பேசும் போது இவர்களெல்லாம் ஏன் இன்னும் சாகாமல் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் பேசிவிட்டார்.

நெல்லை கண்ணனுக்கு உடனே பாஜகவிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாலுபேர் கிளம்பி நெல்லை கண்ணன் வீட்டின் முன் தர்ணா செய்ய, ஹெச்.ராஜா இன்னும் கோபமாக பதிலுக்கு பேசியுள்ளார். நெல்லை கண்ணன் மீது பாஜக 3 பிரிவுகளில் வழக்கு போட்டுள்ளது.

கீழே இணைக்கப்பட்டுள்ள காணொலி நெல்லை கண்ணன் பேசியது..

YouTube player

Related Images: