தியேட்டர்களில் காத்து வாங்கினாலும் முகநூல்,வாட்ஸ் ஆப் மற்றும் திருட்டு ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் சக்கைப்போடு போட்டுவரும் தர்பார் படத்தை மதுரைக்கார மாமனிதர் ஒருவர் கேபிள் டிவியிலும் ஒளிபரப்பி பெரும் புண்ணியம், கட்டிக்கொண்டிருக்கிறார். தயாரிப்பு தரப்பு அவர் மீது போலீஸில் புகார் கொடுத்திருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9-ந் தேதி வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் மிக மிக சுமார் என்பதால் தியேட்டர் வசூல் சுத்தமாக படுத்தே விட்டது.

இந்த நிலையில், மதுரையில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி சேனலில் ‘தர்பார்’ திரைப்படத்தை ஒளிபரப்பி இருப்பதை அறிந்த ரஜினி மக்கள் மன்றத்தினர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில் கேபிள் டிவியில் படத்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்பார் படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்டது படக்குழுவினரை அதிர்ச்சியிலும் பொதுமக்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Related Images: