இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீங்காத நாயகனாக கடந்த பத்து வருடங்களாக இருந்த மகேந்திரசிங் தோனி இந்த வருடத்துக்கான பிசிசிஐ யின் பட்டியலில் ஒரு சாதாரண வீரராகக் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

மற்ற வீரர்கள் 5 கோடி, பத்துகோடி என்று பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சூழலில் பிசிசிஐ தோனியை சாதாரண வீரர் பட்டியலில்கூட சேர்க்கவில்லை. தோனியும் இதுபற்றி கோபப்பட்டு கூட எதுவும் பேசவில்லை. அமைதியாக இருக்கிறார். பிசிசிஐ தோனியின் கிரிக்கெட் வாழ்வை ஒரே நாளில் மண்ணை அள்ளி மூடியதன் காரணம் என்ன என்று மீடியாக்களில் பலருக்கும் தெரிந்திருந்தும் யாரும் எதுவும் கூறாமல் மௌனம் காத்தனர்.

ட்விட்டரில் கௌரவ் பாண்டே என்பவர் தற்போது இதுபற்றி ஒரு பதிவிட்டுள்ளார். ஜார்க்கண்ட் எலெக்சன்கள் நடந்தபோது பாஜக டோனியை அணுகி தங்கள் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும்படி கேட்டுக் கொண்டது. தோனி அதை மறுத்துவிட்டார்.

பிஜேபியில் சேர்ந்து போட்டியிடாவிட்டால் பரவாயில்லை. ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிக்காக பிரச்சாரம் செய்யும்படி கட்சி வலியுறுத்தியது. தனக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் என்றும் தான் கிரிக்கெட்டை நேசிப்பதாகவும், எனவே கட்சி, தேர்தல் பிரச்சாரம் போன்ற விஷயங்களில் ஈடுபட விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார் தோனி.

ஓ அப்படியா ! இனி நீ கிரிக்கெட் விளையாடிப்பாரு பாப்போம் என்று தோனிக்கு பிசிசிஐ மூலமே ஆப்பு வைத்திருக்கிறது பாஜக.

போலோ ! பாரத மாதா கீ ஜெய்

Related Images: