அவ்வப்போது பெரியார் பேரனாகவும் அவதாரம் எடுக்கும் வம்புத்தம்பி சிம்பு, ஆணவக் கொலைகளுக்கு எதிராக தன்னையும் அறியாமல் ஒரு வித்தியாசமான குரல் கொடுத்திருக்கிறார். அதாவது சிம்பு ஃபேன் என்று சொன்னாலே அந்தப் பையனை பெண்கள் தைரியமாகக் காதலிக்கலாமாம்.

’மாநாடு’படத்தில் நடிக்கக்கிளம்பிய உற்சாகத்தோடு, நடிகர் சிம்பு நீண்ட காலத்திற்கு பிறகு நேற்று இரவு ஒரு பிரபல கல்லூரியின் விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பாட்டு பாடியும், நடனமாடியும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இதனையடுத்து பேசிய அவர் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு கொடுத்துவரும் அன்பு பற்றி உருக்கமாக பேசினார்.அதில், ‘எனக்கு படங்கள் கிடைப்பதை தடுக்க ஒரு கூட்டமே வேலை செய்கிறது. நீங்கள் (ரசிகர்கள்) இப்படி எனக்கு அன்பு கொடுத்தால் அவங்களுக்கு காண்டாகுமே. சிம்பு ரசிகன்னு பசங்க சொன்னா பொண்ணுங்க தைரியமா கண்ணமூடிட்டு அவன லவ் பண்ணுங்க.

படம் நடிக்காமல் சும்மா இருந்தபோது, ஊரே என்னை கழுவி ஊற்றும் போது ‘என் தலைவன் திரும்ப வருவான்’னு எனக்கு ஆதரவா நிக்கிறான்னா, அவன் கட்டுன பொண்டாட்டிக்கும் லவ் பண்ற பொண்ணுக்காகவும் எப்படி நிப்பான்னு யோசிச்சு பாருங்க’ என கூறியுள்ளார். ஒரு பையனைக் காதலிக்க ஜாதி மதம் முக்கியம் இல்லை.அவன் சிம்பு ரசிகனாக இருக்கும் ஒரு தகுதி மட்டும் போதும் என்று சொன்னதன் மூலம் அவர் பெரும் சமூகப் புரட்சி ஒன்றுக்கு வித்திட்டிருப்பதாக பிரபஞ்சம் முழுக்க பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.