நம் நாட்டின் கொரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம், இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லை…… 😎

ஏன்…??!

உளவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும்.

“குப்ளர் ரோஸ் மாடல்”

“குப்ளர் ரோஸ் மாடல்” என்று ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, மனிதனுக்கு எதேனும் துக்க நிகழ்வு, இயற்கை பேரிடர், விபத்து போன்றவை நடக்கும் போது, அவன் 5 கட்டங்களை கடந்து செல்கிறான்.

அவை….
1.Denial
2.Anger
3.Bargain
4.Depression
5.Acceptance

1.Denial –
அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதை நம்ப மறுப்பது. உதாரணத்திற்கு நமக்கெல்லாம் கொரொனா வராது என்று மறுத்தது. அப்படியே வந்தாலும், நமது ஊர் வெயிலில் அது பரவாது என்று மீண்டும் மறுத்தது… 🤫

2.Anger –
கோபம் கொள்வது. உதாரணத்திற்கு , ஊரடங்கு போட்டு விட்டார்களே, வருமானம் பாதிக்குமே, இயல்பு வாழ்க்கை கெட்டு விட்டதே என்று கோபம் கொண்டது. 😠

  1. Bargain –
    கொரோனா வராமல் இருந்திருக்கலாமே , ஊரடங்கு உத்தரவு போடாமல் விட்டிருக்கலாமே என்று உள்ளுக்குள் புலம்புவது. 😷
  2. Depression –
    இப்படி ஆகிவிட்டதே என்று மன அழுத்தம், மனச்சோர்வு அடைவது. 😢
  3. Acceptance –
    கடைசி கட்டம். வேறு வழியில்லாமல் , அதை ஏற்றுக்கொள்வது. அதாவது….. கொரோனாவுடன் வாழ பழகிகொண்டது 😂😂

இந்த 5 நிலைகள் , கொரோனாவிற்கு மட்டுமல்ல. மனித வாழ்வில் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளக்கும் பொருந்தும்.

புத்திசாலி என்ன செய்வான் ?….

“இதுவும் கடந்து போகும்” என்று உணர்ந்து , முதல் நிலையிலிருந்து நேராக ஐந்தாம் நிலைக்கு சென்று விட்டு, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, மன அழுத்தம் இல்லாமல், வாழ்வில் முன்னேற்றம் அடைவான். 💪

ஐந்தாம் நிலைக்கு செல்லமுடியாமல் சிக்கிக்கொள்பவன், மன அழுத்தம் ஏற்பட்டு, மனநோயாளியாகிறான் ! 😴

ஆக,

உணர்வோம்… தெளிவோம்….
தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, வெல்வோம்….

இதுவும் கடந்து போகும் !

–வாட்ஸப் பதிவு.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.