2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்….

அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்..எப்படி?!

மூட நம்பிக்கை

இறை நம்பிக்கை

மத நம்பிக்கை

இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது.

மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு

1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்.

2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்.

3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்.

4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்.

5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்.

6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்.

என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை “மட்டுமே” கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இட‌ம் ஒப்படைத்து விட்டனர்.

_20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்.

காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை.

எனது பெரியப்பா 3ஆம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ஆம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ஆம் வகுப்பு வரை சென்றார்.

என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுது தான் கல்வியை உணருகிறது என்றால், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை..?!

ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல், அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் முதலியார், பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்🤔!?

ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!

மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.
அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ, பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள்.

இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்._

கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது

அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி🤔 பறிபோகும். அடுத்து உரிமை?

எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக் கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்.

நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்.

கருத்து – கி.பிரியாராம்

வாட்ஸ்அப் வரவு

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.