அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டால் தான் வேலைக்கு வரமுடியும் என்பது, வேலையில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்ட ஸர்டிபிகேட்டை காண்பிக்கச் சொல்வது, அப்படி சான்றிதழ்களை தொழிலாளர்கள் காண்பிக்காவிட்டால் உரிமையாளரின் உரிமம் ரத்து செயயப்படும், எல்லாம் சட்டப்படி தனிமனித உரிமைகளை பறிககும் செயல்களாகும். அத்தகைய உத்தரவுகளை நம் ஊரில் கலெக்டர்களே போட்டு சாமான்ய மக்களை தடுப்பூசி போட மறைமுகமாக மிரட்டி வருகிறார்கள். இது அதிகார துஷ்பிரயோகமாகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 13 ன்படி, உறுதி செய்யப்பட்ட தனிமனித உரிமைகளை பறிக்கும் விதமாக எந்தவித உத்தரவும் போடமுடியாது. ஆர்டிகிள் 375 படி இந்திய சாசனத்துக்கு உட்பட்டு தான் அனைத்து அலுவலகங்களும் இயங்க முடியும். அதன் படி ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் கடைக்கு சீல் வைப்போம் என்பதெல்லாம் சட்டத்து விரோதமான உத்தரவாகும். அதே போல ஒரு தனிமனிதர் தடுப்பூசி போட்டாரா இல்லையா என்பது அவரது அந்தரங்கமான விஷயம். அதை பொதுவெளியில் சட்டப்படி யாரும் கேட்க முடியாது. அதை எழுத்து பூர்வமாகத் தான் அரசு, அந்த நபரிடம் கேட்டு வாங்க முடியும். நீலகிரியில் ரேஷன்கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு வேலை இல்லை என்று அறிவிப்பு உள்ளது. இன்னொரு ஊரில் கலெக்டர் தடுப்பூசி சர்டிபிகேட் காட்டினால் தான் பெட்ரோல் பல்க்குகளில் பெட்ரோல் போட முடியும் என்று உத்தரவு போடுகிறார்.

இதுபோன்ற உத்தரவுகள் பற்றி நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆஷா அஜித்துடன் தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன் அவர்கள் தொலைபேசியில் பேசியது இது. இந்த உரையாடலில் இது போன்ற சட்ட விரோத உத்தரவுகளை போட வேண்டாம் என்று மாநகராட்சி ஆணையரிடம் வேண்டுகோள் விடுக்கிறார். தடுப்பூசியின் பின்விளைவுகளுக்கு , உயிரிழப்புகளுக்கு, அரசோ, தடுப்பூசி நிறுவனமோ பொறுப்பேற்காத நிலையில் தடுப்பூசி போட கட்டாயப்படுத்தும் உத்தரவுகளைப் போடும் கலெக்டர்களோ, மற்ற அரசு அதிகாரிகளோ அதன் பின்விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்களாகிறார்கள்.

YouTube player

மக்களை சட்டவிரோதமாக மிரட்டி, அதிகார துஷ்பிரயோகமாக வெளியிடும் இதுபோன்ற உத்தரவுகளின் விளைவுகளாக, வரப்போகும் சட்ட சிக்கல்களை ஏற்கத் தயாராக உள்ளார்களா அராஜக பொது ஊழியர்கள்?…

புதுச்சேரி துணை ஆளுநர் விட்ட சுற்றறிக்கையில், தீபாவளி சலுகைகள் பெற மக்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்று அறிக்கை விட்டதையொட்டி, துணை ஆளுநரின் பிஆர்ஓ விடம் தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன் தடுப்பூசி கட்டாயம் என்கிற வார்த்தையை அறிக்கையில் வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பும் ஆடியோ கீழே.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.