முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரைப் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாகக் கருத்துத் தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக ஆசாமி கல்யாணராமன் நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பாஜக ஆசாமியான கல்யானராமன் சமூக வலைதளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆகியோரைப்பற்றி சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும் திரைப்பட நடிகை மருத்துவர் ஷர்மிளாவை ஆபாசமான முறையில் பேசியிருந்தார்.

அதனால், திமுகவின் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் உதவியாளர் சந்தோஷ் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மற்றும் மருத்தவர் ஷர்மிளா ஆகியோரைப் பற்றி ஆபாசமாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே அவரை உடனே கைது செய்யவேண்டும் என சென்னை சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்ட 10 மணிநேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் தேவி குப்பம் அன்பு நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.