நடிகர், நடிகைகளின் ஊடல், கூடல், இன்னொரு ஆசாமியைத் தேடல் செய்திகளுக்கு மீடியாக்காரர்கள் எப்போதுமே சப்புக்கொட்டிக்கொண்டு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்த வகையில் தனது காதல் கணவர் நாக சைதன்யாவைப் பிரிந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தார் சமந்தா. இது போன வாரம். இனி வரும் வாரங்களில் நடிகை நயன் சமந்தா இடைத்தை கைப்பற்றுவார் என்று வதந்திகள் கிளம்பத் துவங்கியுள்ளன.

சமாச்சாரம் இதுதான்…

விக்னேஷ்சிவன் நயன்தாரா ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதில் நெற்றிக்கண் படத்தைத் தயாரித்திருந்தார்கள்.

மேலும் ராக்கி, கூழாங்கல் போன்ற படங்களை அந்நிறுவனத்தின் பெயரில் வாங்கி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இப்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’படத்தை முதல்பிரதி அடிப்படையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவைதவிர, மேலும் சில சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அதற்காக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறாராம் விக்னேஷ்சிவன். விக்கி ப்ளிக்ஸ் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள அப்புதிய நிறுவனத்தில் விக்னேஷ்சிவன் மற்றும் அவர் தங்கை ஆகியோர் பங்குதாரர்கள் என்று சொல்லப்படுகிறது. நயன்தாராவுடன் இணைந்து தொடங்கியிருக்கும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இருக்கும்போதே தங்கையைப் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு புதிய நிறுவனமொன்றை விக்னேஷ்சிவன் தொடங்கியிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வியப்பு மெல்ல சந்தேகமாக மாறி விரைவில் இருவரும் பிரிந்து செல்ல வாய்ப்புண்டு என்பதாகவும் பார்க்கப்படுகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.