சந்தானம் முழு காமெடியனாக இல்லாமல் நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் ‘சபாபதி. இதில் அவர் ஒரு திக்குவாய் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் அவரது நீண்ட கால நண்பர் ரமேஷ் குமார்.

நேற்று புதனன்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா கமலா தியேட்டரில் நடந்தது..\

இயக்குநர் சீனிவாசராவ், நாயகி பிரீத்தி வர்மா, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், நடிகர்கள் விஜய் டிவி புகழ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இவ்விழாவில் பேசிய சந்தானம், பழைய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்து தனது நண்பரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான ரமேஷ் குமாரை செமையாகக் கலாய்த்தார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சந்தானமுன் ரமேஷ் குமாரும் ‘அண்ணாச்சி’கடை போன்ற ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார்களாம். அம்முதலாளியுடம் அவர்களுக்கு நல்ல உறவு இல்லை. அது குறித்து மனம் கசந்து சந்தானம் ரமேஷிடம் பேசியபோது, “ நீ அவர் கிட்ட கோபமா பேசி வேலையை விட்டுப்போறேன்னு சொல்ல. உன்னையும் என்னையும் அவ்வளவு லேசுல அவர் வேலையை விட்டுத்தூக்க மாட்டார். அப்படியே உன்னைய வேலையை விட்டுப் போகச்சொன்னா நானும் உனக்காக வேலையை விட்டுடுறேன்’ என்றிருக்கிறார் ரமேஷ்.

அவரது பேச்சை நம்பி சந்தானமும் அண்ணாச்சியிடம் கோபமாகப் பேச அவர் சந்தானத்தை அப்போதே வேலையை விட்டு அனுப்பியிருக்கிறார். ரமேஷை நம்பி சந்தானம் வேலையை விட அவரோட சேர்ந்து வேலையை விட வேண்டிய ரமேஷோ ‘தேவையில்லாம அவசரப்பட்டு வேலையை விட்டுட்டியே நண்பா’ என்று சந்தானத்தைக் கலாய்த்திருக்கிறார்..

அச்சம்பவத்தை நினைவுகூர்ந்த சந்தானம், தற்போது ரிலீஸ் சமயத்தில் ஃபைனான்ஸ் பிரச்சினையில் சிக்கித்தவிப்பதை நினைவூட்டி ‘அவசரப்பட்டு என்னை வச்சிப் படம் தயாரிச்சிட்டியே நண்பா” என்று கலாய்க்க அரங்கம் முழுவதும் ஒரே கரவொலி.

சந்தானத்தின் வேண்டுகோளை ஏற்று இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் மதுரை ’அன்பு’ தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்கிறார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.