எண்ணிலடங்கா இடையூறுகளைக் கடந்து நாளை வெளியாவதாக இருந்த நடிகர் சிம்புவின் படம் மறுபடியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…sureshkamatchi
@sureshkamatchi
·
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்…என்று கூறியிருக்கிறார்.
நேற்று முதலே இப்படத்துக்கு முன்பதிவு துவங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சிம்பு ரசிகர்கள் படுபதட்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.