பிரபல நடிகர்களின் வீட்டுக்கு என்ன காரணத்தாலோ அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரை நேற்று போலீஸார் அழைத்து விசாரித்து வருகின்றனர். ‘ஜெய்பீம்’பட பிரச்சனை தொடர்பாக பிரபல நடிகர்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வெடிகுண்டு மிரட்டலை விட்டவர் நடிகர் சூர்யாவின் ரசிகராக இருப்பாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் நடிகர் விஜய், குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடித்து சிதறும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு சென்று அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். ஆனால் நீண்டநேரம் தேடியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரித்தபோது, விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த வாலிபர் என தெரியவந்தது.

இவர், ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டுக்கும், மேலும் நடிகர்கள் அஜித்குமார், சரத்குமார் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளதுடன், நடிர் விஜய் வீட்டுக்கு தற்போது 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.