1925ம் ஆண்டு பிராமணர்களால் பிராமணர்கள் நலனுக்கு மட்டும் தொடங்கப்பட்ட rss இயக்கம் .,

ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய் முன்பே நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாக அசுர குல மக்களை ஏமாற்றி பிழைத்திட அரசனுக்கு மது ஊற்றி .மாதுவை கூட்டி.சூது கற்பித்து பிராமணர்கள் தங்களது ஏகபோக நலன்களை பேணிப் பாதுகாத்து வந்தனர்.

இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய
நிறுவனம் பிராமணர்களின் மனு கோட் பாட்டால் இம்மண்ணில் நிலவி வரும்
ஏற்றத்தாழ்வுகளை கண்டு பூர்வ குடி மக்களுக்கு கல்வி . வேலைவாய்ப்பு. நிலம்.மத உரிமைகளை பெற்று தந்தனர்

கல்வி. மத உரிமை ஆகியவற்றின் மூலம் விடுதலையை பெற்ற பூர்வ குடிமக்கள் அரசியல் விடுதலையைப் பெற முனைப்பு காட்டி. பிராமணர்களின் மனு சனாதன கொடுமைகளை பூர்வகுடி மக்களிடம் எடுத்துரைத்து எழுச்சி யுற செய்தனர்.

மனு கோட்பாட்டை எதிர்த்த மக்களிடமிருந்து பிராமணர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள 18ஆம் நூற்றாண்டின் முடிவில் காங்கிரஸ் என்ற அமைப்பையும் இந்து மகா சபா என்ற அமைப்பையும் தொடங்கி இதுவரையிலும் பிராமணர் நலனுக்காகவே செயல்பட்டுவந்த சனாதன கோட்பாட்டை சற்று தளர்த்தி பிரிட்டிஷ் அரசு மூலம் இம்மண்ணின் பூர்வகுடி மக்களை ஏமாற்றி பிழைத்திட இந்து மக்கள் என்ற கோட்பாட்டு சூழ்ச்சி வலைக்குள் கொண்டு வந்தனர்.

இந்து மக்கள் எனும் கோட்பாட்டை வலுப்படுத்தி ட பிராமணர்கள் இத்தாலி அதிபர் முசோலினியின் பாசிச கொள்கை.ஜெர்மனி அதிபர் இட்லரின் நாசிச கொள்கை யால் ஈர்க்கப்பட்ட பிராமணர்கள் அந்நாட்டிற்கு சென்று நேரில் கண்டு அந்நாட்டு மக்கள் ராணுவ மயமாக்கப்பட்டு ஒரு நபர் உத்தரவின் பேரில் தங்களோடு வாழும் மனிதர்களை மனிதர்களாய் மதிக்காமல் வதைத்து கொன்றொழிப்பதை கண்டு வியப்புற்ற பிராமணர்கள்.

இந்திய மண்ணிலும் மக்களை இந்துத்துவா எனும் கோட்பாட்டின் கீழ் அணி திரட்டுவதற்காக சிறுவர் இளைஞர்களுக்கு ஷாகா பயிற்சி வகுப்பு மூலம் ஆயுதங்களை கையாள்வது. வெடி குண்டு எறிவது.
சிறுபான்மை கிறிஸ்துவர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்மத்தை விதைத்து உருவாக்கி வருகின்றனர்.

இந்துத்துவ கோட்பாட்டின் கீழ் வன்மம் விதைத்து அணி திரட்டப்பட்ட RSS ஷாகா
பயிற்சி பெற்ற அடியாட்களை ராணுவத்திற்கு உள்ளே நுழைப்பதற்கு தான் அக்னி வீரர் தேர்வு. இத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 100 பேரில் நான்காண்டுகள் கழித்து 25 பேர் பணிநிரந்தரம் செய்யப்படும். மீதமுள்ள 75 அப்பாவி இந்து இளைஞர்களை ஒன்றிய அரசு நயவஞ்சகமாக வஞ்சித்து வருவதை கண்கூடாக காணலாம்.

கொடூரச் செயலில் ஈடுபடும் RSS அடிவருடி BJP சங்பரிவார கும்பலின் சதித்திட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்திட ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் ஓரணியில் திரண்டு முறியடிப்போம்.

சீ.விசுவநாதன்.9444962210
கிழக்கு மாவட்ட செயலாளர்.ஈரோடு

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds