பா. ரஞ்சித் இயக்கத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘தங்கலான்’ படம் உருவாகியுள்ளது. இம்மாத துவக்கத்தில் படத்தின் டீஸர் மிரட்டலாக வெளியாகியது. 

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக கருத்துள்ள படங்களை இயக்கி வரும் பா. ரஞ்சித் கடைசியாக இயக்கிய படம் ‘நட்சத்திரம் நகர்கிறது. பெரும் விமர்சனங்களைப் பெற்றது. தற்போது ‘தங்கலான்’ படத்தினை பெரும் பொருட் செலவில் இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

பழங்குடியின மக்களின் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அழுத்தமான திரைக்கதையுடன் தங்கலான் வெளியாகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு பாலிவுட் ஹீரோவை மும்பையில் வைத்து சந்தித்த போது, அவரிடம் தங்கலான் டீசரை காட்டினேன். அதனை பார்த்து வியந்த அவர், உடனே ரஞ்சித்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவருடைய இயக்கத்தில் நடிக்கவும் ஆர்வமுடன் இருக்கிறார் என்று தெரிவித்தார். மேலும், தானும் பாலிவுட்டில் நான்கு படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்தார்.

இதன்மூலமாக விரைவிலே பா. ரஞ்சித் பாலிவுட் திரையுலகில் நுழைவார் என்பது உறுதியாகியுள்ளது. ‘தங்கலான்’ படத்தினை கோலார் தங்க வயல் பின்னணியில் ‘கேஜிஎப்’ குறித்த உண்மை வரலாற்றினை கூறும் விதமாக படமாக்கியுள்ளார் பா. ரஞ்சித். இப்படத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘தங்கலான்’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் பன்மொழிப் படமாக தயராகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds