நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் பிள்ளைகளுடன் ஜோதிகாவின் சொந்த ஊரான மும்பையில் குடியேறி வசித்து வருகிறார். பிள்ளைகளின் படிப்பிற்காக, தான் அங்கு சென்றுள்ளதாக ஜோதிகா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

 தற்போது சூர்யா – ஜோதிகாவை தொடர்ந்து ஜெயம் ரவியும் மும்பைக்கு குடியேறியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருக்கும் ஜெயம் ரவி மும்பைக்கு குடியேறியுள்ளதாகவும், அங்கிருந்தபடியே தன்னுடைய படங்களின் கதைகளை கூட கேட்டு வருகிறாராம்.

ஜெயம் ரவி மும்பைக்கு ஏன் குடியேறினார் என்பது பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. தற்போது ஜெயம் ரவி  பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் பிரதர் திரைப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.