அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி,புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரவீண் ராஜ்ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜூ ஸ்மித்இசையமைத்திருக்கிறார்.பிஎம் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில்
வெ.வ.அருண்குமார் தயாரித்துள்ளார்.
ஒரு தாயின் வைராக்கியம் மிக்கதொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும்விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த
விழிப்புணர்வைஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்ததிரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார்.
விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத்திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும்முன்னோட்டம்
வெளியீட்டு நிகழ்வு ஜூன் 2 அன்று நடந்தது.
நிகழ்வில்,மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவருமான தொல்.திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்வில் தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில்….
இங்கு சிறப்புவிருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும்வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனெனில்ஏமாற்றாதே,பொய் சொல்லாதே,திருடாதே,கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றைப்பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள்
ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்துவெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காகக் கடினமாக உழைத்த ‘குயிலி’ பட குழுவினர் அனைவருக்கும்மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்ததிரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும்வாழ்த்துகிறேன்,வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன்.இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியைப் பேசுகிறது. ஒருஅம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களைச்சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படிபோராடுகிறார்கள்? என்பதை இப்படம்
விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்டஇப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக
உருவாகி இருக்கிறது. இதற்காக இயக்குநரைப்பாராட்டுகிறேன். இந்தப்படம் வெளியான பிறகு படத்தைபார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக்கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாககருதுகிறோம் என்றார்.
நடிகை தாஷ்மிகா பேசுகையில்….
இந்தப் படத்தில் நடிப்பதற்குஎனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்குஇந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ
ஒருபடப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுஇப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்குஎதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் எனபடக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என்மேல் நம்பிக்கை வைத்து இந்தக்
கதாபாத்திரத்தைவழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்நன்றி என்றார்.
மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்….
குறிப்பிட்டசமுதாயத்திற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ இல்லாமல்,எல்லாருக்குமான தலைவராகவும்,ஒட்டுமொத்ததமிழினத்திற்கும்
தலைவராகத் திகழும் தொல் திருமாவளவனைவருக, வருக என வரவேற்கிறேன். அவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே
எனக்கும், அவருக்கும் பழக்கம் உண்டு. விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் நாங்கள்தினமும்
சந்தித்துக் கொள்வோம்.இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை போல் இவருக்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக்கொண்டே இருக்கிறது.பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல்
நிறுவனம் தயாரித்திருக்கும்இந்த ‘குயிலி’ திரைப்படம் அற்புதமான குடும்பப் படம். ஒரு தாய்தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார்என்பதைஅற்புதமாகச் சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர்முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த
தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன்.இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சிஇல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்துஇயற்கையாக
உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்னகொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார்கள்.நான் தமிழக
முதல்வருடனும், திருமாவுடனும் நெருக்கமாகத்தான் இருக்கிறேன். ஆனால் இந்த மது விஷயத்தில் சற்றுவிலகியே இருக்கிறேன். குடி பல குடும்பங்களைக்கெடுத்திருக்கிறது. பல குடும்பங்கள் பலியாகி இருக்கிறது. அதனால் குடியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல,
இந்தியாமுழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் 20 முதல் 25 சதவீத பெண்களும் குடிக்கத்தொடங்கி
இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாடு மிகவும்மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் தமிழக முதல்வரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் ஒரு வழியில் மதுவை ஒழிக்க வேண்டும்.இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன.ஆனால்என்னை
பொருத்தவரை இந்தப் படத்திற்கு இத்தனை பாடல்கள்தேவை இல்லை. திரையரங்கத்தில் பாடல் காட்சிகளைஇரசிகர்கள் விரும்பிப்
பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் பாடல்கள்அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கருத்துள்ள பாடல்இருக்கிறது, மது ஒழிப்பைப் பற்றிப்
பேசுகிறது,மதுவால்தாய்மார்கள் படும் வேதனையைப் பேசுகிறது. இதனால் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து
கொள்வதைபெருமிதமாகக் கருதுகிறேன். இப்படம் வெற்றி பெற வேண்டும். படத்திற்கு முதலீடு செய்த பணம் தயாரிப்பாளருக்கு
திரும்பக்கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு தமிழ்இரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்
கேட்டுக்கொள்கிறேன். முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்கவேண்டும் என தயாரிப்பாளர்களிடத்திலும்,
இயக்குநர்களிடத்திலும் பரிந்துரைக்க வேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் ப.முருகசாமி பேசுகையில்…
இயக்குநர் பாலாஜிசக்திவேலிடம் உதவியாளராகப் பணியாற்றும் போது தான் கார்ல்மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார்
ஆகியோரைப்பற்றி வாசித்தேன்.அதன் மூலமாக பல விசயங்களைக் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில்
இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன்.எளியமக்களின்
வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன்.அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்கமுடிந்தது.இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றியஇசையமைப்பாளர்,ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர்,உதவி இயக்குநர்கள்,நடிகர்கள், நடிகைகள் எனஅனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.நான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர்,பெரியார்ஆகியோரைப் பார்க்கவில்லை. இந்த மூவரும் ஒன்றாகஇருக்கும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவைப் பார்க்கிறேன்.சிறிய வயதிலிருந்து அவருடைய
போராட்டத்தையும், பேச்சையும் கேட்டு பார்த்து வளர்ந்தவன்.பா.இரஞ்சித்தைப்பார்த்தும் வளர்ந்திருக்கிறேன் என்றார்.
இசையமைப்பாளர் ஜூ ஸ்மித் பேசுகையில்…
முதலில்என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, நான் இசைத்துறையில் பயணிக்க விரும்புகிறேன் என்ற என்விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து இதுவரை எதையும்அவர்கள் கேட்டதில்லை. இதனைத் தொடர்ந்து இப்படத்தின்தயாரிப்பாளரான அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக
அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.அவர் ஒவ்வொரு முறை தொலைபேசிமூலம் பேசும்போது நலம் விசாரித்து நான் படம்
தயாரித்தால் நீதான் இசையமைப்பாளர் என உற்சாகப்படுத்துவார்.பத்துஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரிப்பாளரானதும்
அழைப்புவிடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும்வழங்கினார்.சினிமாவில் இருந்து தோல்வி அடைந்தவர்களை விட,
சினிமாவை விட்டுவிட்டு சென்று தோல்வி அடைந்தவர்களின்எண்ணிக்கை தான் அதிகம்.என்னை சினிமாவில் அழைத்துவந்தவர்கள்
யாரும் தற்போது என்னுடன் இல்லை.அவர்கள்சினிமாவிலும் இல்லை.வேறு துறைக்கு சென்று விட்டார்கள். இந்தத் தருணத்தில்
தயாரிப்பாளர் அருண்குமார் மட்டுமேஎனக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பளித்தார்.இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம்
வித்தியாசமாகஇருந்தது.மறக்க முடியாததாகவும் இருந்தது.இயக்குநர்முருகசாமி,’குயிலி’ கமர்ஷியல் திரைப்படம் அல்ல,v
கருத்துசொல்லும் படம். அதற்கேற்ற வகையில் இசையமைக்கவேண்டும் என சொன்னார்.அதன் பிறகு நான் இசையமைத்தபாடல்கள்
அனைத்தும் அவருக்குப் பிடித்தது.இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன.ஐந்துபாடல்களும் மதுவைக் குடிக்காதே என்பதை
சொல்லும்விதமாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களைநான்கு புதுமுகப் பாடகர்கள் பாடி இருக்கிறார்கள் என்றார்.
இயக்குநர் ஸ்ரீஜர் பேசுகையில்….
சினிமாவும் அரசியலும்ஆண்டாண்டு காலமாக இணைந்து பயணித்துக்கொண்டிருக்கின்றன.சமீப காலமாக சினிமாவில் அரசியல்பேசு
பொருளாக மாறி இருக்கிறது.’குயிலி’ திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும்,கலாச்சாரத்தையும் பேசும் என நம்புகிறேன். இந்ததிரைப்படத்தில் குடிக்கு அடிமையானவர்களைப் பற்றி ஒருபாடம் எடுத்திருக்கிறார்கள்.தாய்ப்பாசத்தை மிக அழகாகச்
சித்தரித்திருக்கிறார்கள்.இந்த விழாவின் நாயகனான ஜூ ஸ்மித் பத்து ஆண்டுகளுக்குமுன் என்னால் அடையாளம் காணப்பட்டு
அறிமுகப்படுத்தப்பட்டவர்.இந்தத் திரைப்படத்தில் நிறையபாடல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.இதுபோன்றபடங்களுக்கு
இரண்டு பாடல்களே போதுமானது.பரபரப்பானஇந்த வாழ்க்கைச் சூழலில் சினிமாவையே ஒன்றரை மணிநேரமாக சுருக்கி விட்டோம்.
இதுவே போதும் என்றும்நினைக்கிறோம்.’குயிலி’ திரைப்படம் நல்ல கலாச்சாரத்தையும், நல்லபண்பாட்டையும் போதிக்கும் படமாக
இருக்கிறது.வலியைபதிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.படத்தின்இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்,
படக் குழுவினருக்கும்வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில்….
எல்லோருக்குமான தலைவர் தொல் திருமாவளவன் வாழ்க்கைவரலாறு சுயசரிதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என
விரும்புகிறேன். யாரேனும் இதற்கு முயற்சி செய்தால்அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நான் தயாராகஇருக்கிறேன்.இப்படத்தின்
இயக்குநர் முருகசாமி,’கல்லூரி’ படத்தில்இருந்து என்னிடம் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒருகுறும்படத்தை இயக்கி என்னிடம்காண்பித்து அதன் பிறகுஉதவியாளராகச் சேர்ந்தார்.இன்று வரை என்னுடன்பயணிக்கிறார்.அவர் ஒரு நடிகரும் கூட, இந்தப்
படத்திலும்நடித்திருப்பார் என நினைக்கிறேன்.’பொன்னியின் செல்வன்’,’அசுரன்’ ஆகிய படங்களில் நான்நடிக்கும் போது என்னுடன்
வருகை தந்து அங்கு நடைபெறும்விஷயங்களை உள்வாங்கிக் கொள்வார்.அதையெல்லாம்செய்த பிறகு தான் அவர் இந்தப் படத்தை
உருவாக்கி இருப்பார்என நம்புகிறேன்.இயக்குநர் முருகசாமி மிக எளிமையான பின்புலம்கொண்டவர்.மறைந்த நடிகர் மயில்சாமி உடன் இணைந்துஏராளமான தொண்டுகளை செய்திருக்கிறார்.எளிமையாகபழகக்கூடிய முருகசாமி இயக்குநராக உயர்ந்திருப்பதைகண்டு
மகிழ்ச்சி அடைகிறேன்.அவருக்கு வாய்ப்பளித்ததயாரிப்பாளர் அருண்குமாரை மனதாரப் பாராட்டுகிறேன்.இந்தப் படத்தை எளிய
மனிதர்களின் பார்வையில் இருந்துஇயக்கியிருக்கிறார்.அதில் வீரியம் இருக்கும்.இதுதான்இப்படத்தின் பலம்.இப்படத்தின் திரைக்கதையும்நன்றாகஅமைத்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெற்றிபெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன்,என்றார்.
பாடலாசிரியர் வேட்டவலம் த.ராமமூர்த்தி பேசுகையில்….
நான்இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை எழுதிஇருக்கிறேன்.இதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும்,இயக்குநருக்கும்
நன்றி.மதுவால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பது அதனால்பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது தான் பொருத்தமாகஇருக்கும்.ஒரு சிலதருணங்களில் உண்மையைச் சொல்லலாம். அது அனைவருக்கும் பயன்படும்… நானும் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து
மீண்டுஇப்படத்தின் பாடல்களை எழுதி இருக்கிறேன்.இதற்குஉறுதுணையாக என்னுடைய குடும்ப உறுப்பினர்கள்இருந்தனர்…மதுவைத் தொடாதீர்கள். தொட்டாலும் அதனை விட்டுவிடுங்கள். அப்போதுதான் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும் என்றார்.
நடிகை லிசி ஆண்டனி பேசுகையில்…..,
சுய விருப்பம், கடினஉழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள்மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள்.
இதைத்தான்நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்துவருகிறேன்.இந்த விஷயங்களை தயாரிப்பாளர்அருண்குமாரிடமும்
நான் பார்த்தேன்.இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான்எனக்கு முதலில் வந்தது.அவரே இப்படத்தின் கதையை
என்னிடம் விவரித்தார்.என் வாழ்க்கையில் முதல் முதலாகதயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால்அது
இவர் தான.அந்த அனுபவம் மறக்க முடியாததாகஇருந்தது. இந்தப்படம் பேசும் விஷயமும் எனக்குபிடித்திருந்தது.இந்தப் படத்திற்கு
‘குயிலி’ என்று தான் தலைப்பு இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன்.உடனேஅவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.
இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு இரசிகர்களும், ஊடகங்களும்ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்……
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இனமக்கள் மீதான இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துஇடதுசாரி இயக்கங்கள்
நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை
மேடையிலேயே கேட்டேன். படம்எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன்ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
இந்தக் காலச் சூழலில் சமூகப் பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒருதிரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும்,
தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதைப் பாராட்டுகிறேன்.நெஞ்சார வாழ்த்துகிறேன்.வணிக நோக்கில் திரைப்படங்களை
தயாரிக்க வேண்டும்,அதில் வெற்றி பெற வேண்டும்,அதில் இலாபம் பெற வேண்டும்என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு
மக்களுக்குவழி காட்ட வேண்டும்,இந்த குடியின் துன்பத்திலிருந்துமக்களை விடுவிக்க வேண்டும்,விடுதலை பெற வேண்டும் என்ற
வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்தப் படைப்பைஉருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது.இந்தக் குழுவினரைப்பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என்வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடுஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள்அனைவருக்கும் தெரியும்.அது பேசு பொருளாகவும் மாறியது.கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.அண்ணன் ராஜன் பேசும்போது, ‘தேசிய அளவில் மதுவைஒழிக்க வேண்டும்’ என்றும் , இது தொடர்பாக திருமாவளவன்நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும்நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்கக் கூடும் என்றும்குறிப்பிட்டார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. நான்
மக்களவையில் இது குறித்துப் பேசியிருக்கிறேன்.அவர்என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது.இது தொடர்பாக
நாடாளுமன்றத்தில் நான் பேசிய போதுகுறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுதொடர்பாக அரசியல் ரீதியான
விமர்சனத்தை முன் வைத்தார். நாம் அதைக் கடந்து சிந்திக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ளஇளைஞர்கள் மட்டுமல்ல இந்தியா
முழுவதும் உள்ள நம்தேசத்து மக்கள் குடியினால் பாதிக்கப்படக்கூடாது என்றபரந்துபட்ட பார்வை நமக்கு உண்டு. ஆகவே மது ஒழிப்புகொள்கையை தேசியக் கொள்கையாக இந்திய அரசுஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாகதொடர்ந்து வலியுறுத்தி
வருகிறேன்.மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக்கொள்கிறோம்.அவருடைய திருவுருவ படத்தை ரூபாய்நோட்டுகளில்
அச்சடிக்கிறோம்.அவருடைய கொள்கைகளில்முக்கியமானது மதுவிலக்கு.மகாத்மாவை தேசத் தந்தை என்றுஏற்றுக் கொண்டிருக்கும் நாம்அவருடைய உயிர் மூச்சானகொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே? இதனை மாநிலங்கள் பார்த்துக்
கொள்ளட்டும் என்று ஒன்றியஅரசு கண்டும் காணாமல் இருக்கிறது.தமிழ்நாடு மட்டுமல்லஏனைய மாநில அரசுகளும் இதனை
தங்களுடையவருவாய்க்கான வழியாகத்தான் பார்க்கிறது.யார் கெட்டுப்போனால் என்ன? என்ற அலட்சியப்போக்குத்தான் நீடிக்கிறது.
இது தொடர்பான கவலை பல பத்தாண்டுகளாக எனக்குஇருக்கிறது. இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன்.பலமாநாடுகளில்
தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.இன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதைபொருள்களும் பகிரங்கமாக
விற்பனை செய்யப்படுகிறன.நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப்பொருள்கள் தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறது.இதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மதுஒழிப்பு தேசியக்
கொள்கையாக அறிவிக்க வேண்டும் எனஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு
உள்ளானது.அரசியல் ரீதியாகவும்விமர்சிக்கப்பட்டது.இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப்பொருள்கள்
கட்டுப்படுத்தப்பட வேண்டும்.குறிப்பிட்டசமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளையதலைமுறையினரும்
குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தங்களதுவாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.குடும்பம்நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து
விடுகிறார்கள்.ஏதோ பெயரளவில் தாம்பத்திய உறவை கொண்டு,இரண்டுகுழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.ஆனால் அவர்களை
பராமரிக்கவும்… பாதுகாக்கவும்,.படிக்க வைக்கவும், எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கவும், பொறுப்புணர்வு கொண்ட
ஆளுமையாக அவர்கள் இல்லை.நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.அதிகாலையில் இருந்துபடுக்கைக்கு செல்லும் வரை போதையில் மிதக்கிறார்கள்.அவ்வளவு குடும்பப் பாரத்தையும் மனைவி சுமக்கிறாள்.அதுஎவ்வளவு கொடிய துயரம் என்பதை களத்தில் நேரடியாகச்
சென்று சந்தித்தால்தான் உணர முடியும்.இந்த நாட்டைப் பீடித்திருக்கின்ற பேரவலங்களுள் இதுவும்ஒன்று.இந்தப் படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டைக் கேட்டேன்.இந்தஅவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள்.இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாகத்
தொடுகிறது.மிக மிகஇன்றியமையாத ஒரு பாடல்.எல்லா கிராமங்களிலும்கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல்.எல்லோரும்
தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல்.விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல்.இசையும் மிகச்சிறப்பாக
இருக்கிறது.வேட்டவலம் த.ராமமூர்த்தி இப்பாடலைஎழுதியிருக்கிறார்.அவருக்கும் என் பாராட்டுகள்.இந்த விஷயத்தில் நம்
ஒவ்வொருவருக்கும் பொறுப்புஇருக்கிறது. இதில் அரசியலை நுழைத்து மதிப்பீடு செய்யவேண்டியதில்லை.தமிழக முதலமைச்சரிடத்தில்இது தொடர்பாக தனிப்பட்டமுறையில் பேசும் போது அவருக்கும் இது தொடர்பான கவலைஇருக்கிறது.ஆனால் இது ஒரு சமூகக்
கட்டமைப்பு, சிஸ்டம். அரசு அரசு சார்ந்த கட்டமைப்புகள் சில தருணங்களில்நம்முடைய விருப்பங்களை மீறி இயங்கக் கூடியவையாக
அமைந்து விடுகின்றன.மக்களிடத்தில் பரந்துபட்ட அளவில் இதற்கான விழிப்புணர்வுதேவை.இன்று மதக் கலவரங்களும்,
வன்கொடுமைகளும்அதிகரிப்பதன் பின்னணியில் மதுவும் ஒரு காரணம் என்பதைநாம் காண முடிகிறது.’குயிலி’ படத்தால் என்ன
சாதிக்க முடியும் என்று கருதாமல்விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்லவேண்டும். சில இளைஞர்களையாவது
இத்தகையபாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.துயரத்திற்கு ஆளாகாமல்தடுக்க முடியும்.இளம் தலைமுறையினரைப் பாதுகாக்க முடியும்மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும்போதை மறுவாழ்வு மையம் இடம்பெற வேண்டும், இதுஎன்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும்தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும்உளவியல் ஆலோசனை மையம் இடம்பெற வேண்டும். இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்தவேண்டும்.மதுப்பழக்கம் ஒரு
தனிமனிதனை மட்டும் பாதிப்பதில்லை.சமூகத்தையேப் பாதிக்கிறது.எனவே மது மற்றும்போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாகஒழிக்கப்பட வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.